ஞாயிற்றுக்கிழமை அங்காள ஈஸ்வரி வழிபாடு

amman1
- Advertisement -

பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு ரொம்ப ரொம்ப முக்கியமாக தேவைப்படக்கூடிய ஆன்மீக பொருள், எலுமிச்சம்பழம். அதிலும் இந்த அங்காள ஈஸ்வரி வழிபாட்டிற்கு எலுமிச்சம் பழம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பொருள் என்று சொல்லலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பநலன் கருதி அம்பாள் வழிபாடு செய்வது, சிறப்பான பலனை கொடுக்கும்.

வீட்டில் சுபகாரிய தடை உள்ளது, அல்லது ஏதோ தீர்க்க முடியாத பிரச்சனையில் குடும்பத்தில் இருப்பவர்கள் சிக்கிவிட்டார்கள், அந்தப் பிரச்சினை எல்லாம் கூடிய விரைவில் சரியாக வேண்டும் என்றால் அங்காள ஈஸ்வரியை எப்படி வழிபாடு செய்வது, ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கஷ்டம் தீர்க்கும் அங்காள ஈஸ்வரி வழிபாடு

வீட்டுப் பெண்கள் தான் கட்டாயம் இந்த வழிபாட்டை செய்யணும். அவரவர் வீட்டு பக்கத்தில் கட்டாயம் தேடிப் பார்த்தால் அங்காள ஈஸ்வரி கோவில் இருக்கும். அந்த அங்காள ஈஸ்வரி கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமையில் செல்லவும். முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமையில் செல்லவும். ஞாயிற்றுக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணி வரை இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

கோவிலுக்கு போகும் போது மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொள்ளுங்கள். கோவிலுக்கு சென்று சாதாரணமாக மண் அகல்விளக்கில் அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பிறகு கோவிலிலேயே அமர்ந்து இந்த மூன்று எலுமிச்சம்பழத்தையும் உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுடைய பிரச்சனை என்ன அதை கோரிக்கையாக அம்பாளிடம் சொல்லுங்கள். கையில் கட்டாயம் எலுமிச்சம்பழம் இருக்கணும்.

- Advertisement -

வேண்டுதலை முடித்துவிட்டு இதை அர்ச்சகரிடம் கொடுத்து, அம்பாளின் பாதத்தில் வைத்து தர சொல்லி கேளுங்கள். இதை அப்படியே உங்களுடைய புடவை முந்தானையில் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் சுடிதார் துப்பட்டாவில் கூட இதை வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய இந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்து ஒரு பேப்பரில் வைத்து ஒரு கிண்ணத்தின் மேல் இதை வைத்து, பூஜை அறையில் வைத்து, விடுங்கள்.

உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது நிறைவேற இந்த எலுமிச்சம் பழம் ஒரு வழியை காட்டிக் கொடுக்கும். இந்த எலுமிச்சம் பழம் பூஜை அறையில் இருக்கலாம். அடுத்த வாரம் உங்களுடைய கோரிக்கை நிறைவேற, இதே போல வேண்டுதல் வைக்கணும். பழைய எலுமிச்சம் பழத்தை நீர் நிலைகளில் போடலாம். முடியாதவர்கள் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இதற்கிடையே இந்த எலுமிச்சம் பழம் அழுகிவிட்டால் உடனடியாக அதை உங்கள் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேற வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ, இந்த வேண்டுதலை வைத்து அங்காள ஈஸ்வரி கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர்க்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

வேண்டுதல் நிறைவேறும் வரை வாரம் வாரம் இதை செய்யுங்க. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -