கஷ்டம் தீர்க்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

durgai
- Advertisement -

குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் நம்முடைய கெட்ட நேரமும், கிரக சூழ்நிலையும் தான். இரண்டாவது காரணம் நம்மை சுற்றி இருக்கும், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல். இந்த இரண்டையும் துவம்சம் செய்யக்கூடிய சக்தி துர்க்கை அம்மனுக்கு உள்ளது. துர்கை அம்மன் கையில் இருக்கும் சூலத்திற்கு உள்ளது.

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்பாளை வேண்டி இந்த வழிபாட்டை செய்யுங்கள். இந்த ஒரு பொருளை எடுத்து நிலை வாசல் படியில் வையுங்கள். உங்கள் குடும்பத்தை தொடர்ந்து வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். குடும்பப் பாதுகாப்பை கருதி செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய அந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு

செவ்வாய்க்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். திங்கள்கிழமை மஞ்சள் நிறத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழத்தை வாங்கி வீட்டில் வைத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கவும்.

உங்கள் உள்ளங் கைகளில் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்யவும். உங்கள் குடும்பத்தில் எந்த கஷ்டம் இருக்குதோ, அந்த கஷ்டம் முற்றிலுமாக சரியாகி விட வேண்டும் என்று மனம் உருகி துர்க்கை அம்மனை நினைத்து வேண்டுதல் வையுங்கள். குலதெய்வத்தையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளில் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தை சிறிது நேரம் அம்பாளின் பாதங்களில் வைத்து எடுக்கவும்.

- Advertisement -

உங்க வீட்டிலேயே கட்டாயம் ஏதாவது ஒரு அம்மனின் திரு உருவப்படம் இருக்கும் அல்லவா. அந்த அம்மன் பாதத்தில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து எடுத்து இரண்டாக நறுக்கி இதில் ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமம் தடவி உங்கள் வீட்டு நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைத்து விடுங்கள்.

அவ்வளவுதான், செவ்வாய்க்கிழமை காலையிலேயே இந்த எலுமிச்சம் பழத்தை நிலை வாசலில் வைத்து விட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் அழிக்கப்படும். எதிர்மறை சக்தியானது வீட்டிற்குள் ஊடுருவாமல் இருக்கும். அந்த எலுமிச்சம்பழம் வாடியுடன் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்பாள் சன்னதிக்கு சென்று விளக்கு போட வேண்டும். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை உங்க கையோடு எடுத்துச் செல்லவும்.

இதை அம்பாளின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து மீண்டும் வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வையுங்க. இந்த எலுமிச்சம்பழம் உங்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும். அடுத்த செவ்வாய்க்கிழமை வரை இந்த எலுமிச்சம் பழம் பூஜை அறையிலேயே இருக்கலாம். ஆனால் இதற்கிடையில் அந்த எலுமிச்சம் பழம் காய்ந்து போக வேண்டும்.

ஒரு வேலை எலுமிச்சம் பழம் அழுகி விட்டால் அதை அப்படியே ஒரு பேப்பரில் எடுத்து வீட்டில் இருந்து தூரமாக எடுத்துக் கொண்டு போய் குப்பையில் போட்டு விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அந்த அழுகிய எலுமிச்சம் பழம் கிரகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

இதே போல வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்பாளை தொடர்ந்து வழிபாடு செய்து வர உங்கள் குடும்பம் துர்க்கை அம்மன் பாதுகாப்பு கவசத்தில் இருக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. கூடவே இன்னொரு எலுமிச்சம் பழத்தை கூடுதலாக எடுத்துச் சென்று துர்கை அம்பாள் பாதத்தில் வைத்துக் கொண்டு வந்து, அந்த எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு பிழிந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பருகலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வம் சேர மூன்றாம் பிறை தரிசனம்

இதனால் நம்முடைய உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கெட்ட சக்தி கண் திருஷ்டி அனைத்தும் நீங்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -