வறுமையை நீக்கும் அன்னபூரணி வழிபாடு

annapoorani
- Advertisement -

என்னதான் ஓடி ஓடி பணம் சம்பாதித்து சொத்து சுகம் சேர்த்து வைத்தாலும், நமக்கானது ஒரு ஜான் வயிறு சாப்பாடு தான். இந்த ஒரு ஜான் வயிறு, ஒரு நாளும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஓடி ஓடி பணம் சேர்க்கின்றோம். எவ்வளவு பணம் இருந்தாலும், பத்து நாள் சாப்பாட்டை ஒரு நாளில் சாப்பிட முடியாது.

ஒரு நாள் கூட சாப்பிடாமல் பட்டினியாகவும் இருக்க முடியாது. இந்த சாப்பாட்டை நமக்கு கொடுப்பவள், அன்னபூரணி. அன்னபூரணியை வருடத்தில் ஒரு நாள் பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்தீர்கள் என்றால், உங்களுடைய வீட்டில் வறுமை என்ற வார்த்தை நுழையாது. செல்வ வளம் நிறைவாக இருக்கும். சக்தி வாய்ந்த அன்னபூரணி வழிபாட்டை பற்றிய ஒரு அரிதான ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வறுமையை நீக்கும் அன்னபூரணி வழிபாடு

இந்த வழிபாட்டுக்கு நமக்கு முதலில் முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் சோற்றுக்கற்றாழை. இந்த சோற்றுக்கற்றாழையானது அன்னபூர்ணிக்கு உரிய செடியாக சொல்லப்பட்டுள்ளது. அரை அடி நீளம் இருக்கும் சோற்றுக்கற்றாழையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே இருக்கும் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய தோலை நீக்கி விடுங்கள். உள்ளே கொழ கொழப்பாக இருக்கும் ஜெல் மட்டும் நமக்கு தேவை.

கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டு லேசாக சூடு செய்யவும். இப்போது நமக்கு தைலம் போல ஒரு எண்ணெய் கிடைத்திருக்கும். இந்த எண்ணெயை ரொம்பவும் சக்தி வாய்ந்த எண்ணெய். இந்த எண்ணெய்க்கு அன்னபூரணியின் அருள் ஆசையை முழுமையாக பெற்று தரக்கூடிய பவர் இருக்கு.

- Advertisement -

வருடத்தில் ஒரு நாள் இந்த விளக்கை உங்க வீட்டில் ஏற்ற வேண்டும். உங்கள் வீட்டில் அன்னபூர்ணையின் சிலை இருந்தாலும், இந்த வழிபாட்டை செய்யலாம். அன்னபூரணியின் சிலை இல்லை என்றாலும் அவளை மனதார நினைத்து இந்த வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ளலாம். பூஜை அறையில் அன்னபூரணியின் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து, நாம் தயார் செய்து வைத்திருக்கும் தைலத்தை ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் அன்னபூரணியை மனதார நினைத்து எங்க வீட்டில் வறுமை என்பது நிச்சயம் இருக்கக் கூடாது. வீட்டில் இருப்பவர்கள் பணம் காசு இல்லை, அரிசி வாங்க வழி இல்லை, என்று சாப்பிடாமல் ஒருநாளும் இருக்கக் கூடாது, அன்னபூரணியின் ஆசிர்வாதம் முழுமையாக எங்கள் குடும்பத்திற்கு இருக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பாக ரொம்ப ரொம்ப வறுமையில் வாடி வதங்கும் குடும்பத்தினர், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் அவர்களுக்கு அன்னபூரணியின் ஆசி உடனடியாக கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகும். தன தானியத்திற்கு பஞ்சம் இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டு விடும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கே ஒரு வேலை சாப்பாடு வாங்க கஷ்டமாக இருந்த உங்க குடும்ப சூழ்நிலை அப்படியே தலைகீழாக மாறி, சாப்பாடு இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு உங்களுடைய நிலை உயரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: வாராகியை பூஜை அறையில் நிரந்தரமாக தங்க வைக்க செய்ய வேண்டிய பரிகாரம்

அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த வழிபாடு தான் மேலே சொல்லப்பட்டிருக்கும் கற்றாழை தைல எண்ணெய் வழிபாடு. குடும்ப கஷ்டத்தில் இருப்பவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை ஒரே ஒருநாள் செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் குடும்ப கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -