குழந்தை பேரு இல்லாதவர்கள் நாளை அன்னாபிஷேகத்தின் போது இதை செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

sivan child
- Advertisement -

அலங்கார பிரியர் விஷ்ணு, அபிஷேக பிரியர் சிவன் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அபிஷேகங்களால் மகிழ்வர் தான் இந்த சிவபெருமான். அப்படியான இறைவனுக்கு ஒவ்வொரு பௌர்ணமியும் விசேஷமானதாக இருந்தாலும் நாளை வரக்கூடிய ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர பௌர்ணமி மிகவும் விசேஷமானது. அவருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் இந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் தட்சணின் சாபத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்று 16 கலைகளுடன் ஐப்பசி பௌர்ணமி அன்று முழு பொலிவுடன் திகழ்கிறார். அரிசியானது சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பொருள் அன்றைய தினத்தில் அரிசியை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் போது நாடும் வீடும் வறுமை இன்றி சுபிட்சமாக இருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் தான் மற்ற பௌர்ணமிகளை விட இந்த ஐப்பசி மாத பௌர்ணமி விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். நாளைய ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சிவபெருமானின் இந்த அன்னாபிஷேக அலங்காரத்தை கண்டால் நமக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம். இந்த வழக்கை தான் நம் முன்னோர்கள் இப்படி பழமொழியாக சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய இந்த அன்னாபிஷேகத்திற்கு புண்ணிய பலன்கள் உண்டு.

குழந்தை பாக்கியம் பெற

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த அன்னா அபிஷேகத்தில் கலந்து கொண்டு அதற்கான அபிஷேகப் பொருள்களை வாங்கி தரலாம். இப்பொழுதெல்லாம் அன்னாபிஷேத்தின் போது காய்கறிகள், அப்பம், வடை, போன்றவற்றையெல்லாம் வைத்து வணங்குகிறார்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கூட நாம் வாங்கிக் கொடுக்கலாம். குறிப்பாக அன்னாபிஷேகத்திற்கான அரிசியை வாங்கி கொடுத்து இந்த அபிஷேக நேரத்தில் சிவபெருமானை தரிசித்து வணங்க வேண்டும். இது தான் மிகவும் முக்கியம்.

- Advertisement -

சிவபெருமானின் இந்த அபிஷேகம் மட்டும் தான் இரண்டு நாளிதழ் அதாவது குறைந்தது ஒன்றரை மணி நேரம் வைத்திருப்பார்கள். இந்த நேரம் முழுவதும் நாம் ஆலயத்திலே அமர்ந்திருந்து சிவபெருமானின் மந்திரங்களை உச்சாடனம் செய்து மனம் உருகி அவரை வேண்டி வணங்க வேண்டும். இந்த அபிஷேகம் முடிந்த பிறகு சிவபெருமானின் மேல் இருக்கும் அன்னத்தை எடுத்து அத்துடன் தேன் கலந்து பிரசாதமாக தருவார்கள்.

இந்த பிரசாதத்தை வாங்கி உண்ணும் பொழுது நிச்சயம் சிவபெருமானின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த அபிஷேகத்தை காண்பவர்களுக்கு இந்த பிறவி மட்டுமின்றி ஏழு பிறப்பிலும் வறுமை என்பதே வராது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

வீட்டில் சிவலிங்கம் வைத்து வணங்குபவர்கள் அவருக்கான அபிஷேகங்களை சரியாக செய்யாத பட்சத்தில் தோஷங்கள் நேரும். இந்த அன்னா அபிஷேகத்தில் கலந்து கொண்டு இந்த பிரசாதத்தை உண்ணும் பொழுது அந்த தோஷம் கூட நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால் நமக்கு ஏற்படும் இத்தனை பலன்களும், அந்த அன்னாபிஷேகம் நடைபெறும் ஊர்களுக்கும் கிடைக்கும். இந்த அபிஷேகம் நடைபெறும் ஒவ்வொரு ஊரும் வறுமை நீங்கி சுபிட்சமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சந்திர கிரகணத்தின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்

நம்முடைய வாழ்க்கையில் எப்பேர்பட்ட துன்பங்கள் துயரங்கள் இருந்தாலும் சிவன் அருள் இருந்தால் அனைத்தும் தூள் தூளாகும். அத்தகைய சக்தி வாய்ந்த பெருமானின் இந்த அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு அவருடைய அருளாசியை பெற்று நம்முடைய வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -