சந்திர கிரகணத்தின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்

chandra-graham2
- Advertisement -

எல்லோருக்குமே வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற வேண்டும். சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை பெற வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு கைநிறைய சம்பளத்தோடு நாம் நல்ல பதவியில் ஒரு வேளையில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வியாபாரத்தில் நாலு பேர் மதிக்கும் அளவுக்கு நல்ல முன்னேற்றத்தோடு இருக்க வேண்டும்.

கைநிறைய காசு பணம் இருந்தால் தான் இந்த சமுதாயம் நமக்கு ஒரு மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கின்றது. என்ன செய்வது. வாழ்க்கையில் வெற்றிக்கான அடையாளமே இந்த பணம் காசு தான். நீங்கள் செய்யும் வேலையில் திறமையாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டுமா. வியாபாரத்தில் திறமையாக செயல்பட்டு விஸ்வரூப வெற்றியை அடைய வேண்டுமா.

- Advertisement -

இந்த சந்திர கிரகணத்தின் போது பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உங்களுடைய வேலையும் சரி, வியாபாரமும் சரி, பல மடங்கு முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற சந்திர கிரகணத்தின் போது உச்சரிக்க வேண்டிய அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வாழ்க்கையில் முன்னேற சந்திர கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

அக்டோபர் 29 ஆம் தேதி இரவு 1.44 மணியிலிருந்து, அதிகாலை 3.56 வரை சந்திர கிரகணம் ஆனது நடக்க இருப்பதாக நமக்கு விஞ்ஞானிகளால் சொல்லப்பட்டுள்ளது. (அதாவது சனிக்கிழமை இரவு நீங்கள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். சனிக்கிழமை இரவு 12.00 மணி தாண்டி விட்டால், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கணக்கு வந்துவிடும்.

- Advertisement -

அதுதான் 29 என்ற தேதியை குறிப்பிட்டு இருக்கின்றோம்.) இந்த சந்திர கிரகணம் நடைபெறவிருக்கும் இரண்டு மணி நேரமும், இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சந்திர கிரகணம் நடைபெறக்கூடிய இடைப்பட்ட நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 2.00 மணி அளவில் கண்விழித்து கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்பவர்களாக இருந்தால் அந்த வேலையில் மேலும் மேலும் உயர்ந்த பதவியை அடைய வேண்டும். மேலும் மேலும் நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் அந்த தொழிலில் முன்னேற வேண்டும் என்ற பிரார்த்தனையை வையுங்கள். நீங்கள் செய்யும் வேலையின் பெயர், நீங்கள் செய்யும் தொழிலின் பெயரை மனதார சொல்லி இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். நீங்கள் சொல்வதை இந்த பிரபஞ்சம் கேட்டுக் கொண்டிருக்கும்.

பிறகு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு முன்பாகவே அமர்ந்து ‘ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ஸ்ரீ கமலே கமலாலயே ப்ரஸித்-ப்ரஸித் ஸ்ரீ ஹ்ரீ ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை அடைய முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் சமுதாயத்தில் நீங்கள் பெரிய மனிதர்கள் என்ற அந்தஸ்தையும் பெறுவீர்கள். பெயர் புகழ் பதவி எல்லாம் உங்கள் பின்னால் வரும். கூடுமானவரை இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: சந்திர கிரகணத்தின் மூலம் அதிர்ஷ்டம் பெறப்போகும் 6 ராசிகள்

இந்த மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு 27 முறை சந்திர பகவானை மனதில் நினைத்து ‘ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ’ என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம். இந்த சந்திர கிரகணம் நேரத்தில் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -