ஏப்ரல் மாத மைத்ரேய முகூர்த்தம்

murugar
- Advertisement -

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை அன்று கடனை திருப்பிக் கொடுத்தால் அந்த கடன் சீக்கிரம் அடையும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த செவ்வாய் கிழமையோடு மைத்ரேய முகூர்த்தமும் சேர்ந்து வந்தால் சொல்லவா வேண்டும். இதில் இரட்டிப்பு பலன். இந்த நேரத்தை யாரும் தவற விடாதீங்க.

9-4-2024 செவ்வாய் கிழமை அன்று வரக்கூடிய இந்த 34 நிமிடத்தை நாளைய தினம் நீங்கள் தவறவிட்டால், மீண்டும் இதே போல ஒரு நாள் அமைவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியாது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தினால் உங்கள் கடன் பிரச்சனைக்கு கூடிய சீக்கிரம் விடிவுகாலம் கிடைக்கும். நாளைய தினம் மைத்ரேய முகூர்த்தம் எப்போது வருகிறது. அந்த நேரத்தில் கடனை அடைக்க என்ன பரிகாரம் செய்யலாம் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

ஏப்ரல் மாதம் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

9-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7:32 மணி முதல் 8:06 வரை மைத்ரேய முகூர்த்தம் நேரம் இருக்கின்றது. இதிலும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் இதனுடைய மத்திய நேரம் காலை 7:43 மணியிலிருந்து 7:54 இந்த 11 நிமிடம் ரொம்ப ரொம்ப துல்லியமான நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ரொம்ப இக்கட்டான கடனில் சிக்கி இருப்பவர்கள் துல்லியமான இந்த 11 நிமிடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே மைத்ரேய முகூர்த்தம் என்பது ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் நமக்கு வரும். ஆனால் இந்த செவ்வாய்க்கிழமையில் வந்திருக்கக்கூடிய அதி அற்புதம் வாழ்ந்த இந்த மைத்ரேய முகூர்த்தமானது நமக்கு 34 நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகவே கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நேரத்தை தவறவே தவற விடாதீங்க. நாளைக்கு நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது. நீங்க யாரிடம் கைநீட்டி கடன் வாங்குனீர்களோ, அவர்கள் கையில் இந்த நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்தால் அந்தக் கடன் தொகையை திருப்பி கொடுக்கலாம்.

உதாரணத்திற்கு 10,000 ரூபாய் கடன் இருக்கிறது எனும் போது, அதில் நாளை 1000 ரூபாயைத்தான் திருப்பிக் கொடுக்க முடியும் என்றால், உங்களுக்கு கடன் கொடுத்தவர் இந்த சிறு தொகையை பெற்றுக் கொள்வார் எனும் பட்சத்தில் அந்த ஆயிரம் ரூபாயை நீங்கள் அவர் கையிலேயே திருப்பிக் கொடுக்கலாம். நாளை ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுத்தீர்கள் என்றால், மீதி ஒன்பதாயிரம் ரூபாய் கடனை சிரமம் இல்லாமல் திருப்பி தந்து விடலாம். ஆனால் இதற்கான சந்தர்ப்பம் ரொம்ப ரொம்ப குறைவு.

- Advertisement -

பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்தால் அதை நிச்சயம் கடன்காரர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்போ என்ன செய்யணும். மேலே சொன்ன இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வெள்ளை கவர் எடுத்துக்கணும். நீங்க யார்கிட்ட கடன் வாங்கி இருக்கீங்களோ, அவங்களுடைய பெயரை அந்த கவரிங் மேல் எழுதிவிட்டு, ஆயிரம் ரூபாயை அந்தக் கவரில் போட்டு, அதற்கு உள்ளே ஒரு பிரியாணி இலையையும் போட்டு மடித்து உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.

யாரிடம் நீங்கள் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அவர்களிடம் இந்த கடனை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தம். மேலே குறிப்பிட்டுள்ள இந்த செவ்வாய்க்கிழமை மைத்ரேய முகூர்த்தத்தில் கடனை திருப்பிக் கொடுத்தால், அந்த கடன் சீக்கிரமே அடையும் என்பது சூட்சமமான ரகசியம். இது அந்த காலத்திலேயே சித்தர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ள பரிகாரம். நாளைய தினம் மேலே குறிப்பிட்டுள்ள இந்த நேரத்தில் மேல் சொன்ன பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லையில் இருந்து விலக

அந்த முருகப்பெருமானையும் குலதெய்வத்தையும் நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களுக்கு தொல்லை கொடுக்கும் அந்த கடன் ஒரு சில நாட்களில் அடையும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. பல பேர் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்துள்ளார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -