எதிரி தொல்லையில் இருந்து விலக

panai-oolai
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய எதிரிகளை நேரடியாக சண்டை போட்டு எதிர்த்து ஜெயிக்கவே முடியாது அதற்காக எதிரிகளை முதுகில் குத்த வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நம்முடனே வேலை பார்த்து நம்முடனே இருந்து நமக்கு நண்பர்களாகவே இருந்து நமக்கு எதிராக செயல்படும் எதிரிகளை அவர்களுக்கு தெரியாமலேயே நம்மை விட்டு விலக்கி வைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது.

எப்படியாவது என் வாழ்க்கையில் இருந்து இவனை வெட்டி விட வேண்டும். இவனை விட்டுப் பிரிந்தால் மட்டும் தான் என்னால் வாழ்க்கையில் நன்றாக இருக்க முடியும். இவன்தான் எனக்கு மிகப்பெரிய எதிரி என்று யாராவது உங்கள் வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு வருகிறார்களா. அவர்களுடைய முகத்திற்கு நேர் எதிராக இதையெல்லாம் சொல்லி அவர்களை உங்களிடம் இருந்து வெட்டி விட முடியவில்லையா.

- Advertisement -

அந்த நபருக்கே தெரியாமல், அவரை உங்களிடம் இருந்து விலக்கி வைக்க ஒரு அருமையான பரிகாரம் இருக்கிறது. அதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எதிரிக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்றெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அந்த எதிரி உங்க பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டான். உங்கள் உடன் ஒட்டி உறவாடி, உங்கள் வாழ்க்கையை கெடுக்கும் எதிரி, தானாகவே உங்களை விட்டு பிரிந்து சென்று விடுவான்.

எதிரி தொல்லையில் இருந்து விலக

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் பனை ஓலை. இரண்டு கீத்து ஓலை ஒட்டி இருக்கும் பாருங்க. அந்த மாதிரி ஒரு ஓலை எடுத்துக்கோங்க. அந்த ஓலையில் மேல் பக்கத்தில் உங்களுடைய எதிரியின் பெயரை எழுதி விடுங்கள். கீழ்ப்பக்கம் உங்களுடைய பெயரை எழுதி விடுங்கள். இதை அப்படியே ஏதாவது ஒரு இடத்தில் 3 நாள் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மூன்றாவது நாள் இந்த ஓலையை எடுத்து இரண்டாக கிழிக்க வேண்டும்.  உங்களுடைய எதிரி பெயரை எழுதி வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அந்த பனை ஓலையை சுருட்டி ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். அவ்வளவு தான். அந்த எதிரி உங்களை விட்டு மிக நீண்ட தூரம் ஓடி விடுவான். எப்படி தெரியுமா அந்த ஓடுகின்ற தண்ணீரில் அந்த பனை ஓலை எப்படி உங்களை விட்டு நீண்ட தூரம் போகுமோ அதே போல.

ஓடுகின்ற தண்ணீர் இல்லை. ஆறு உங்க வீட்டு பக்கத்தில் இல்லை என்ன செய்வது. இந்த ஓலையை சுருட்டி அப்படியே வேப்ப மரத்தில் கட்டி தொங்க விடுங்கள். உங்கள் எதிரிக்கும் உங்களுக்கும் இருக்கும் சம்பந்தம் அன்றோடு முடிந்துவிடும். ஆதி காலத்தில் நம்முடைய முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில் சக்தி வாய்ந்த பரிகாரம் இது.

- Advertisement -

யாராவது ஒருவர் உங்களுக்கு அதிகமாக தொல்லை கொடுக்கும் எதிரியின் பெயரை இப்படி எழுதி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்றே நாட்களில் நீங்கள் நம்ப முடியாத நல்ல மாற்றத்தை காணலாம். அலுவலகத்தில் உங்கள் கூடவே இருந்து தொல்லை கொடுக்கும் எதிரிக்கும் இதை செய்யலாம். நண்பர்களாக இருக்கும் எதிரிக்கும் இதை செய்யலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரி, இதுவரைக்கும் நீங்க அவனை பார்த்து கூட இருக்க மாட்டீங்க.

இதையும் படிக்கலாமே: முன்னோர்கள் சாபம் விலக அமாவாசை பரிகாரம்

எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு அவன் தான் உங்களுக்கு பிரச்சனையை கொடுப்பான். அவனுடைய பெயர் தெரிந்தால் அதை இதில் எழுதி இப்படி பரிகாரத்தை செய்தாலும் இந்த பரிகாரம் பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிரி தொல்லையால் தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் ஒரு வரம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -