இப்படி மீன் குழம்பு வச்சு பாருங்க. ஒருபோதும் பக்குவம் தவறி மீன் குழம்பு நீர்த்து போகவே போகாது. திக்காக மணக்க மணக்க மீன் குழம்பு வைப்பது எப்படி?

Meen kulambu
- Advertisement -

எல்லோர் வீட்டிலேயும் தான் மீன் குழம்பு வைப்போம். யார் கையால மீன் குழம்பு வச்சாலும் சுவையாக இருக்குதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. சில வீடுகளில் நாம் மீன்குழம்பை ருசித்துப் பார்த்தால் அருமையான ருசி இருக்கும். அதே மீன் குழம்பை நாம் வைத்தால் நம்முடைய கை பக்குவம் ருசி இருக்காது. என்ன செய்வது. பின் சொல்லக் கூடிய குறிப்பை பின்பற்றி யார் மீன் குழம்பு வைத்தாலும் ருசியாக வரும். உங்க வீட்ல ஒரு முறை மீன் குழம்பு இப்படி வைத்து பாருங்க. பக்குவமான மீன் குழம்பு பக்குவமான ருசியில் கிடைக்கும்.

முதலில் ஒரு கிலோ அளவு மீனை வாங்கி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (எந்த வகை மீனிலும் இந்த மாதிரி குழம்பு வைக்கலாம்.)

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது, வரமல்லி – 2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், பூண்டு பல் – 10 போட்டு இதை விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா விழுதும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஒரு கிலோ மீனுக்கு 100 கிராம் அளவு புளி கரைசல் நமக்கு தேவை. ஓரளவுக்கு திக்காக புளி கரைசலையும் கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (மீன் குழம்பு எப்போதுமே பழைய புளியில் வைக்க வேண்டும். கடையில் வாங்கும் போது மீன் குழம்புக்காக பழைய புளி வேண்டும் என்று கேட்டு வாங்குங்கள்.)

- Advertisement -

இப்போது குழம்பு தாளித்து விடலாம். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் 1 குழி கரண்டி அளவு ஊற்றி, வெந்தயம் – 1/4 ஸ்பூன், வெங்காய வடகம் – சிறிதளவு, சேர்த்து தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி, இரண்டு அல்லது மூன்று நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும். இதோடு இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தை பச்சையாக தான் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து இருக்கின்றோம். அதனால் அந்த பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி விட்டு குழம்புக்கு தேவையான அளவு இந்த இடத்தில் குழம்பு மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், சேர்த்துக் கொள்ளுங்கள். (உங்கள் காலத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.) அதன் பின்பு ஒரு பெரிய தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து ஊற்றி நன்றாக வதக்கி விட வேண்டும்.

எல்லா மசாலா பொருட்களும் வெங்காயம் தொக்கும் சேர்ந்து ஒரு கிரேவி நமக்கு கிடைத்திருக்கும். இதில் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.  புளியின் பச்சை வாடை நீங்கி எல்லா மசாலா பொருட்களும் பாதி அளவு வெந்து வந்தவுடன் ஊற வைத்திருக்கும் மீனை எடுத்து புளிக்கரைசலில் போட்டு வேகவைத்து அடுப்பை அணைத்து பரிமாறி பாருங்கள்.

இந்த மீன் குழம்பு கொதிக்கும் போதே அவ்வளவு வாசனையாக இருக்கும். பசியை தூண்டும். சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். சுடச்சுட சாதத்திற்கு கேட்கவே தேவையில்லை. (மீன் குழம்பை கொஞ்ச நேரம் ஆற வைத்து சாப்பிடுங்கள் ருசி இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்.) அருமையான ருசி. உங்களுக்கு இந்த மீன் குழம்பு ரெசிபி பிடிச்சிருந்தா கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -