செல்வத்தின் அதிபதியான குபேரனின் ஆசிகளை நாம் பெற்றாலே, நமக்கும் செல்வம் சேரும் என பொதுவாக கூறுவர். ஆனாலும் அந்த குபேரனுக்கு செல்வத்தை அருளுகின்ற மகாலட்சுமி தேவியின் முழுமையான அருட்கடாட்சத்தின் மூலம் நமக்கு கிடைக்கின்ற செல்வமே, நமக்கு எப்போதும் நிலைத்திருக்கும் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் “அலைமகள்” எனும் லட்சுமி தேவியின் அருளை பெற்று, வறுமை நீங்கி, வளமான வாழ்வு பெற செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
படைத்தல் தொழிலை செய்கின்ற “பிரம்மதேவன்”, காக்கும் தொழிலைச் செய்கின்ற “திருமால்” அனைத்தையும் அழிக்க வல்லவராகிய “சிவபெருமான்” ஆகிய இந்த மும்மூர்த்திகளால் தான் இந்த உலகம் இயங்குகிறது என வேத புராணங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன.
செல்வ செழிப்பு மிக்க வாழ்க்கையை, நாம் வாழ “பிரம்மா, விஷ்ணு, சிவன்” ஆகிய மும்மூர்த்திகளும், மனிதர்கள் வாழ அவர்களுக்கு செல்வங்களை அருளும் செல்வ மகளான லட்சுமி தாயார் மற்றும் நவக்கிரகங்களில் நீதிதேவனும், ஆயுள்காரகன் மற்றும் மிகவும் பலம் வாய்ந்த நவகிரக நாயகனுமாகிய “சனிபகவான்” ஆகியோர்களின் ஆசிகளை ஒருசேர பெற்றுத் தரும் ஒரு அற்புதமான பரிகாரம் தான் இந்த பரிகாரம்.
இந்தப் பரிகாரத்தை ஒரு வளர்பிறை சனிக்கிழமை தினத்தன்று தொடங்கி, தொடர்ந்து 27 சனிக்கிழமைகள் பரிகாரத்தை செய்து வரும் பொழுதே வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவ ரீதியாக பார்க்கலாம் அதே சமயம் வாழ்நாள் முழுவதும் இந்த பரிகாரத்தை செய்தால் நற்பலன்களே அதிகம் ஏற்படும்.
ஒரு வளர்பிறை சனிக்கிழமை அன்று அதிகாலை எழுந்து, தலைக்கு குளித்து முடித்துவிட்டு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற பழமையான சிவாலயங்கள் ஏதாவது இருந்து, அந்தக் கோயிலில் அரச மரம் இருக்கும் பட்சத்தில், அம்மரத்தை காலை 8 மணிக்குள்ளாக 108 முறை வலம் வந்து வணங்க வேண்டும். அரசமரத்தை வலம் வரும் பொழுது, அம்மரத்தை எக்காரணம் கொண்டும் நீங்கள் தொடக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரச மரத்தை சுற்றினால் என்ன பலன்
தங்கள் வீட்டிற்கு அருகில் சிவாலயங்களில் அரச மரம் இல்லாத பட்சத்தில், வேறு எந்த கோயில்களில் அரசமரம் இருந்தாலும் அம்மரத்தை வலம் வந்து வழிபடலாம். நீங்கள் வலம் வருகின்ற அரச மரத்தின் அடியில் விநாயகர் விக்கிரகம் இருந்து, அந்த விநாயகர் விக்கிரகத்தையும் சேர்த்து, அரச மரத்தை 108 முறை வலம் வருவதால் நீங்கள் விரும்புகின்ற எதுவும் இறைவனின் அருளால் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள்.
இதையும் படிக்கலாமே: உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர, புரட்டாசி மாத பௌர்ணமியில் இந்த நேரத்தில் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும்.
அரச இலை தீபம்:
இப்படி 108 முறை அரசமரத்தை வலம் வந்த பிறகு, அதற்கு முன்பாக வேறு ஏதாவது ஒரு அரச மரத்தில் இருந்து பறித்த, ஒரு அரச மர இலையின் மீது, ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வாசம் மிக்க தூபம் கொளுத்தி வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாக அரச மர இலையின் மீது அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றுவதால், அரசமரத்தில் வசிப்பதாக கருதப்படுகின்ற மும்மூர்த்திகளின் ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெற்று மிகுந்த செல்வமும், அசையா சொத்துக்களையும் சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள் என ஆன்மீக பரிகார சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்களுக்கு இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பலன் பெறுங்கள்.