ஒன்பது வாரம் இந்த தானத்தை செய்தால் அரசாங்க வேலை கிடைப்பது நிச்சயம். நிரந்தர வருமானத்தை தர போகும் சுலபமான பரிகாரம்.

dhanam
- Advertisement -

கால் காசு வருமானமாக இருந்தாலும் அது அரசாங்க வருமானமாக இருக்க வேண்டும். அரசாங்க உத்தியோகத்துக்கு தான் போவேன் என்று ஒற்றை காலில் நின்று கொண்டிருப்பவர்கள் இன்றும் நிறைய பேர் உள்ளார்கள். ஆனால், எல்லோருக்கும் அரசாங்க வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எல்லோரும் அரசாங்க வேலைக்கு தான் செல்வேன் என்று சொன்னால் அது சாத்தியம் ஆகாது. ஆகவே, கூடுமானவரை அரசாங்க வேலை கிடைக்கும் வரை கிடைக்கின்ற வேலையை செய்து பணம் சம்பாதிப்பது தான் புத்திசாலித்தனம். சரி, இருந்தாலும் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவை நினைவாக்க ஏதேனும் ஆன்மீகத்தில் பரிகாரம் உண்டா என்று கேட்பவர்களுக்கு இதோ ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான பரிகாரம்.

அரசாங்க வேலை கிடைக்க சனி பகவான் வழிபாடு:
அரசாங்க வேலையே கிடைக்காது என்று ஒரு முடிவு கட்டிடீங்க. இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் ஆசியை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு. சின்ன சின்னதாக 9 கருப்பு துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி அளவு கருப்பு உளுந்து, 1 கருப்பு எள்ளுருண்டை, வைத்து முடிச்சாக கட்டி இதை 9 பேருக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஒரு வாரம், 9 பேருக்கு, இந்த 9 முடிச்சுகளை தானமாக கொடுத்து விட்டீர்கள். அடுத்து வரக்கூடிய 8 வாரமும் இதே போல ஒன்பது முடிச்சுகளை, 9 பேருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சுகளை தானமாக பெற யாருமே இல்லை என்றால் இதை ஓடும் தண்ணீரில் விடுவது சிறப்பு‌. ஓடும் தண்ணீரில் விடுவதற்கும் உங்களுக்கு வசதி இல்லையா. கருப்பு கேரி பேக் வாங்கி கொள்ளுங்கள், அல்லது கருப்பு பை. அதில் 1 கிலோ உளுந்து, 2 கிலோ உளுந்து என்று வாங்கி ஏழை குடும்பத்திற்கு தானமாக கொடுத்து விடுங்கள். (உங்கள் கையில் எவ்வளவு காசு இருக்கோ அதற்கு கருப்பு உளுத்தம் பருப்பு வாங்கி தானம் செய்யலாம்.) தானமாக பெற்றவர்கள் அதை சமைத்து சாப்பிட்டுக் கொள்வார்கள்.

அதேபோல ஆசிரமங்களுக்கு, வீதிகளில் யாசகம் கேட்பவர்களுக்கு எள்ளுருண்டை வாங்கி தானமாக கொடுக்கலாம். கருப்பு எள்ளுருண்டை வாங்கி உங்கள் கையால் தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதோடு சனிக்கிழமை ஆனால், நவகிரக கோவிலுக்கு சென்று, சனி பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வர வேண்டும். பிறகு நவகிரக சன்னிதானத்தை ஒன்பது முறை வலம் வந்து பரிகாரத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இதை செய்தால் நிச்சயமாக உங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். அரசாங்க வேலை தேடி முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் பெருக்கிக் கொண்டே செல்லும்.

இதையும் படிக்கலாமே: இந்த தூபம் போடும் வீட்டில் சகலமும் வசியமாகி நீங்கள் வேண்டுவது எல்லாம் தடையில்லாமல் உங்களை வந்து சேரும். சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் தெய்வீக தூபம்.

நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -