அர்ச்சனை பூக்களும் அதன் பலன்களும்

malargal
- Advertisement -

தெய்வ வழிபாடு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றி இமையாத ஒன்றாக திகழ்கிறது. அவ்வாறு நாம் தெய்வத்தை வழிபடும் பொழுது தெய்வத்திற்காக மலர்களை சமர்ப்பிப்போம். இவ்வாறு மலர்களை சமர்ப்பிக்கும் பொழுது நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலுக்கு ஏற்றார் போல் மலர்களை சமர்ப்பித்தால் அந்த வேண்டுதல் கண்டிப்பான முறையில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அந்த ரகசியத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக அனைத்து தெய்வங்களுக்கும் மலர்களை நாம் சமர்ப்பிப்போம். இதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் வாசனை நிறைந்த மலர்களை தான் தெய்வத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமே தவிர வாசனை அற்ற மலர்களை சமர்ப்பிக்க கூடாது என்று கூறப்படுகிறது. அதேபோல் வாடிய மலர்களையும் சூட்டக்கூடாது. காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மலர்களையும் சூட்ட கூடாது.

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கு ஏற்றார் போல மலர்களும் இருக்கின்றன. முருகர் துர்க்கை அம்மன் போன்றவர்களுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி தருவதும் அம்மனுக்கு மல்லிகை பூக்களை வாங்கி தருவதும் சிவபெருமானுக்கு வில்வ இலையை வாங்கி தருவது பிள்ளையாருக்கு செம்பருத்தி பூவை சமர்ப்பிப்பது என்று பல தெய்வங்களுக்கு பல பூக்களை நாம் சமர்ப்பிக்கலாம். எல்லா தெய்வத்துக்கும் எல்லா பூக்களும் உகந்தது. எந்த எந்த நோக்கத்திற்காக நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறோமோ அந்த நோக்கத்திற்கு ஏற்றார் போல் நாம் மலர்களை வாங்கி சமர்ப்பித்தால் கண்டிப்பான முறையில் அந்த நோக்கம் வெற்றியடையும்.

அல்லி பூவை நாம் தெய்வத்திற்கு வாங்கி சமர்ப்பித்து அர்ச்சனை செய்யும் பொழுது அதனால் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதே போல் மல்லிகை பூவை நாம் வாங்கி தருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி குடும்ப ஒற்றுமை மேலோங்கும். செவ்வரளி பூக்களை வாங்கி தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் பொழுது நமக்கு ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.

- Advertisement -

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அந்த பிரச்சினையை எதிர்த்து போராடும் அளவிற்கு தைரியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் செம்பருத்திப் பூவை வைத்து வழிபட வேண்டும். நினைத்த காரியம் நினைத்தபடி நடந்து வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரோஜாப்பூவை சமர்ப்பித்து வழிபட வேண்டும். நாம் வழிபடும் தெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் அந்த தெய்வத்திற்கு நாம் மரிக்கொழுந்தை சமர்ப்பித்து வழிபட வேண்டும். முடிந்த அளவு குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது மரிக்கொழுந்து மாலையை வாங்கி கொடுத்து வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை பெற முடியும்.

தொழிலில் ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் நீங்கி தொழில் லாபகரமாக நடைபெறுவதற்கு முல்லை பூக்களை வாங்கி கடவுளுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பூக்களை குறிப்பிட்ட தெய்வத்திற்கு தான் சமர்ப்பிக்க வேண்டும் என்று இல்லை. நம்முடைய இஷ்ட தெய்வத்திற்கும் எந்த ஆலயத்திற்கு நாம் சென்றாலும் அந்த ஆலயத்தில் இருக்கும் தெய்வத்திற்கும் இந்த மலர்களை சமர்ப்பிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பண வரவு மற்றும் தம்பதி ஒற்றுமை அதிகரிக்க வழிபாடு

இனிமேல் கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த மலர்களை கருத்தில் கொண்டு அதை நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றார் போல் வாங்கி கொடுத்து வழிபட்டு முழுமையான பலனையும் பெறுவோம்.

- Advertisement -