அரிசி கஞ்சியை தலையில் இப்படி போட்டால் அசுர வேகத்தில் தலை முடி தாறுமாறாக வளரும். பிறகு வளரும் முடியை கட்டுப்படுத்த முடியாது.

hair22
- Advertisement -

அரிசி கஞ்சி, அதாவது சாதம் வடித்த கஞ்சியை தான் இன்று இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகின்றோம். சாதம் வடித்த கஞ்சியை மட்டும் தலைக்கு போட்டாலே தலைமுடிக்கு அவ்வளவு சத்து கிடைக்கும். இதோடு நாம் இன்னொரு சத்து நிறைந்த பொருளையும் சேர்க்க போகின்றோம். இந்த ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு நாள் போட்டு வந்தால் தலைமுடி வளராத இடத்தில் கூட புதிய முடிகள் விரைவாக வளர்வதை நம்மால் பார்க்க முடியும். குட்டி குட்டி பேபி ஹேர் அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா அதை கண்ணாடியில் நீங்களே பார்க்கலாம்.

மகாலை அல்லது மதியம் சாதம் வடிப்பீர்கள் அல்லவா அந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை அப்படியேவும் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் ஒருநாள் புளிக்க விட்டு அடுத்த நாள் பயன்படுத்தினால், அது இன்னும் நல்ல பலனை கொடுக்கும். கொஞ்சம் புளித்த வாடை வீசும் அது தான் பிரச்சனை. வடித்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதோடு நாம் சேர்க்கப் போவது முருங்கைக்கீரை சாறு.

- Advertisement -

2 கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை எடுத்து நன்றாக கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறை அரிசி வடித்து வைத்திருக்கும் கஞ்சி தண்ணீரோடு ஊற்றி நன்றாக கலந்தால் அடர் பச்சை நிறத்தில் ஒரு ஹேர் பேக் நமக்கு கிடைத்திருக்கும்.

இதை சுலபமாக தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். தலைமுடியில் எண்ணெய் வைத்து நன்றாக சிக்கு எடுத்து சீவி விடுங்கள். அதன் பின்பு இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் போட்டுவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து ஜென்டில் ஆக மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசி விடுங்கள். அவ்வளவு தான். உங்களுடைய முடி டிரையாகாமல் உதிராமல் அழகாக அடர்த்தியாக வளர தொடங்கி விடும்.

- Advertisement -

கூடவே முருங்கைக் கீரையை உணவோடு சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது. வாரத்தில் இரண்டு நாட்கள் எப்படியாவது இந்த முருங்கைக் கீரையை சாப்பிட்டு வாருங்கள். கூடவே கருவேப்பிலை பொடி, சட்னி என்று செய்து சாப்பிட வேண்டும். பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட்டு வர வேண்டும். மூன்று மாதத்தில் நம்ப முடியாத முடி வளர்ச்சியை நிச்சயம் பார்ப்பீங்க. உங்களுடைய நீண்ட நாள் நீண்ட முடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை சீக்கிரம் நிறைவேறும். குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: உங்க முகம் தங்க போல ஜொலிக்க நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஒரு பொருள் போதும். பார்லர் செல்லாமலே முகம் மின்னும். மணப் பெண்களுக்கான பேசியல் பேக்.

பின்குறிப்பு: எப்போதுமே ஈரத் தலையில் சீப்பை வைத்து அழுத்தம் கொடுத்து வாரக்கூடாது. தலை முடி வளர்ச்சிக்கு நிறைய பயிற்சிகள் இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்று இரண்டை சுலபமாக பார்த்து செய்வது தலைமுடிக்கு இன்னும் கொஞ்சம் ஆரோக்கியத்தை சேர்க்கும்.

- Advertisement -