அரிசியை இந்த கிழமையில் வாங்கி பாருங்கள்! பிறகு உங்கள் வீட்டில் கடன் தொல்லையே இருக்காது. பணம் பல வழிகளில் வந்து சந்தோஷத்தைக் கொடுக்கும்.

cash-rice
- Advertisement -

சில பேருடைய வீட்டில் மாதம் மாதம் சாப்பாட்டிற்கு அரிசி வாங்குவார்கள். சிலபேர் வாரம் வாரம் தங்களுடைய வீட்டில் தேவையான அரிசியை வாங்கி வைத்துக்கொள்வார்கள். அது அவருடைய வருமானத்தைப் பொறுத்தது. இதில் எதுவும் தவறு கிடையாது. ஆனால் அந்த அரிசியை கூட வாங்க முடியாத அளவிற்கு சில வீடுகளில் கஷ்டம் இருக்கும். அங்குதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. சாஸ்திர சம்பிரதாயத்தின்படி நம் வீட்டிற்கு அரிசியை எப்படி வாங்க வேண்டும். எந்தக் கிழமையில் வாங்க வேண்டும் என்ற விளக்கத்தை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பின்பற்றி நல்ல பலனை பெறலாம்.

rice1

நம்முடைய பசியைப் போக்கக் கூடியது அரிசி. வீட்டில் மற்ற பொருட்கள் எதுவுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. நாம் வறுமையில் வாடாமல் இருக்க, அதாவது பசி இல்லாமல் வாழ்வதற்கு அரிசியும் உப்பு மட்டுமே போதும். சாதத்தில் உப்பு போட்டு கரைத்து குடித்தால் நம் வயிறு நிரம்பிவிடும். வறுமை நம்முடைய வீட்டில் இருந்து அகற்றப்படும். பசி நம் உடம்பில் இருந்து அகற்றப்படும். வீட்டில் வறுமையை நீக்கக்கூடிய முதன்மை பொருளான இந்த அரிசியை திங்கட்கிழமைகளில் வாங்குவது நம் வீட்டிற்கு சுபிட்சத்தை தரும்.

- Advertisement -

மாதம் ஒரு முறை, ஒரு திங்கட்கிழமையில், அரிசியை வாங்கினாலும் சரி தான். வாரம் ஒருமுறை வரக்கூடிய திங்கட்கிழமையில் அரிசி வாங்கிக் கொண்டாலும் சரி தான். அது உங்களுடைய விருப்பத்தை பொருத்தது. திங்கட்கிழமை அன்று கடைக்கு சென்று கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்து அரிசி வாங்க வேண்டும். கடனுக்காக அரிசியை வாங்காதீர்கள்.

rice

நாம் சாப்பிடக்கூடிய அன்னபூரணி தாயாரை, நம் கையில் இருக்கும் மகா லட்சுமி தாயாரை கொடுத்துவிட்டு தான் வாங்க வேண்டுமே தவிர, அன்னத்தை இனாமாக பெறக்கூடாது. இந்த பழக்கம் நம்முடைய வீட்டில் வறுமையை தான் ஏற்படுத்தி தருமே தவிர எந்த நாளிலும் செல்வ செழிப்பை கொடுக்கவே கொடுக்காது.

- Advertisement -

சிலபேர் மளிகை கடைகளில் அக்கவுண்ட் வச்சு வாங்கிட்டு அடுத்த மாதம் கொடுப்பாங்க. அப்படி இருப்பினும் அரிசிக்கு மட்டும் உண்டான தொகையை அப்பவே கொடுத்து பாருங்க. இந்த பழக்கத்தை கொண்டு வந்து பாருங்கள். உங்களுடைய குடும்பத்தில் செல்வ செழிப்பில் வருமானத்தில் சந்தோஷத்தில் நிச்சயமாக சில நாட்களிலேயே மாற்றம் தெரியும். உங்களுடைய கடன் படிப்படியாக குறைய தொடங்குவதை உங்களாலேயே உணர முடியும்.

anna-poorani

உங்கள் வீட்டு அரிசி பானையை எப்போதும் அலமாரியின் மேல் வைக்க வேண்டாம். தரையில் கீழே வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அரிசியில் எப்போதுமே அளப்பதற்கு பயன்படுத்தும் ஆழாக்கு இருக்க வேண்டும். ஆழாக்கு பயன்படுத்தாதவர்கள் ஒரு டம்ளரை அரிசியில் போட்டு வையுங்கள். அளக்க பயன்படுத்தும் டம்ளரில் எப்போதும் இரண்டு அரசி கட்டாயம் இருக்க வேண்டும். சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றினால் நன்மை நடப்பது உறுதி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -