உங்களை அறியாமலேயே நீங்கள் செய்த தவறால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? எப்படிப்பட்ட கோளாறாக இருந்தாலும் அதை சரி செய்வதற்கு இந்த ஒரு பொருளை வைத்து இப்படி அபிஷேகம் செய்தாலே போதும்.

pal abishegam
- Advertisement -

தவறு செய்யாதவர் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. அவ்வாறு செய்கின்ற தவறுக்குரிய பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் தவறு என்று தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டும். ஆனால் சிலரோ சரியாக நடந்து கொண்டு இருக்கும்போது திடீரென்று தங்களை அறியாமலேயே சில செயல்களை செய்து விடுவார்கள். அப்படி செய்வதால் அவர்கள் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும். அதைத்தான் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கோளாறுகள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கோளாறுகளை நீக்குவதற்கு எந்த பொருளை வைத்து எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு கஷ்டம் ஏற்படுகிறது என்றால் அவரிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளால் ஏற்படலாம். எதிர்மறை ஆற்றலால் ஏற்படலாம். கண் திருஷ்டியால் ஏற்படலாம். அல்லது அவர்கள் செய்த தப்பு, தவறுகளால் ஏற்படலாம். இவை எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு சூழ்நிலையில் தன்னை அறியாமல் செய்த தவறை தான் நாம் கோளாறு என்று சொல்கிறோம். தன்னை அறியாமல் பேசுகின்ற சொற்களாலோ அல்லது செயலாலோ தனக்கு கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் மேலும் வரக்கூடிய பிரச்சினைகளில் இருந்து அவர்களால் தப்பிக்க இயலும்.

- Advertisement -

இந்த பரிகாரம் கிட்டத்தட்ட திருஷ்டி கழிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது. அதனால் இந்த பரிகாரத்தை பூஜை அறையில் செய்யக்கூடாது. இல்லத்தில் வரவேற்பறையில் அமர்ந்து இதை செய்ய வேண்டும். எந்த திசையை வேண்டுமானாலும் பார்த்து அமர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மட்டும் தான் செய்ய வேண்டும்.

ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த தட்டாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் 2 வர மிளகாய், 6 மிளகு, 5 கிராம்பு இவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிளாஸ் நிறைய சுத்தமான காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பால் பசும்பால் ஆகவும் இருக்கலாம். பாக்கெட் பாலாகவும் இருக்கலாம். இப்பொழுது உள்ளங்கையில் பாலை ஊற்றி இந்த பொருட்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நம்முடைய உள்ளங்கையின் வழியாக இந்த பால் சென்று இந்த பொருட்களில் விழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவ்வாறு செய்து விட்டு அரை மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு தட்டோடு இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று ஏதாவது ஒரு ஓரத்தில் யார் காலும் படாத அளவிற்கு செடிகளுக்கு அடியில் எங்காவது ஓரிடத்தில் ஊற்றிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். வீட்டிற்குள் நுழையும் பொழுது கை கால்களை கழுவிக்கொண்டு பிறகு வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: எப்பேர்ப்பட்ட பணத்தட்டுப்பாடாக இருந்தாலும், அது விலகி பணவரவை ஏற்படுத்தி, அதிர்ஷ்டத்தை வாரி வழங்க ஸ்படிகலிங்கத்தை இந்த நேரத்தில் வாங்கினாலே போதும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய காரசாரமான பிரச்சனைகள் அனைத்தும் விலகி மனம் அமைதி அடைந்து நிம்மதியுடன் வாழ முடியும்.

- Advertisement -