கணவன் மனைவி வாழ்நாள் முழுவதும் சண்டை சச்சரவு இல்லாமல், பிரியாமல் சந்தோஷமாக வாழ, இந்த 2 தீபங்களை ஏற்றினாலே போதும்.

fight
- Advertisement -

கணவன் மனைவி இருவருக்குள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சின்ன சின்ன சண்டைகள், மனஸ்தாபம் வந்தாலும் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து இருக்கக் கூடாது. ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் அவர்களுடைய சண்டை முடிந்து விட வேண்டும். நீயா நானா என்ற போட்டிக்குள் கணவன் மனைவி வரவே கூடாது. நம்முடைய பிரிவு நம் குழந்தைகளையும் நம் குடும்பத்தையும் பாதித்துவிடும் என்ற எண்ணம் ஒவ்வொரு கணவன் மனதிலும் ஒவ்வொரு மனைவியின் மனதிலும் நிச்சயமாக இருக்க வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்வதினால் எதுவும் கெட்டுப் போவது கிடையாது.

கணவன் மனைவிக்குள் ஏதாவது கிரக கோளாறுகள் இருந்தாலும், அதை சரி செய்ய இந்த ஒரு பரிகாரம் போதும். எந்த பிரச்சனையும் தோஷமும் கிடையாது. ஆனால் சதா சண்டை சச்சரவு வரக்கூடிய தம்பதிகள் இந்த பரிகாரத்தை செய்தாலும் கை மேல் நல்ல பலனை பெறலாம். பிரிந்திருக்கும் கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேர நிறைய வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் சரி, அரச மரத்துக்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் அகல் தீபங்களை ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு மரத்தை மூன்று முறை சுற்றிவர வேண்டும். சனிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றுவது சிறப்பு.

காலை இந்த தீபத்தை ஏற்ற முடியாது என்பவர்கள் மாலை ஐந்து மணிக்கு முன்பாக உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அந்த சமயத்தில் இந்த தீபத்தை ஏற்றி இரண்டு நிமிடம் கண்களை மூடி பிரபஞ்சத்திடம், அந்த இறைவனிடம் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியான எங்கள் இருவருக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கருத்து வேறுபாடும் ஏற்படக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சந்தோஷமாக இறுதிவரை வாழ வேண்டும் என்ற சங்கல்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்கை கணவன் ஏற்றி வைத்து வேண்டுதல் வைத்தாலும் பலிக்கும். மனைவி ஏற்றி வைத்து வேண்டுதல் வைத்தாலும் பலிக்கும். கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து இந்த தீபத்தை ஏற்றி வைப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. வாய்ப்பு இருந்தால் அதை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு வீட்டின் அருகில் அரசமரம் இல்லை என்றால் என்ன செய்வது. எப்படியாவது அரச இலையையாவது வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இரண்டு அரச இலை நமக்கு தேவைப்படும். ஒவ்வொரு அரச இலைக்கு மேலே ஒவ்வொரு மண் அகல் தீபங்களை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு பூஜை அறையிலேயே தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார இறைவனிடம் வேண்டுதல் வைத்தாலும் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கலாம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரலாம். வீட்டில் ஏற்றக்கூடிய மண் அகல் தீபத்தை சனிக்கிழமை அன்று காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் ஏற்றலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையாக இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -