நாளை அசோகா அஷ்டமி வழிபாடு

marudhani
- Advertisement -

பெரும்பாலும் இந்த அசோகா அஷ்டமியை நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அசோகா அஷ்டமி என்றால் என்ன. இந்த நாளை எதற்காக நாம் கொண்டாடுகின்றோம். இந்த அசோகா அஷ்டமி அன்று பெண்கள் கையில் மருதாணியை இட்டுக் கொள்வதன் மூலம் என்னவெல்லாம் பலன் கிடைக்கும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அசோகா அஷ்டமி 2024

வசந்த ராகராத்திரியின் எட்டாவது நாள், அசோகஷ்டமி தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. பங்குனி மாதம் அமாவாசை திதியில் இருந்து எட்டாவது நாள், வரக்கூடிய அஷ்டமி திதி, அசோகா அஷ்டமி என்று சொல்லுவார்கள். ராவணன் சீதையை சிறை பிடித்து வைத்திருந்தான். இலங்கையில் ராவணனின் கோட்டையில், அசோகவனத்தில் தான் சீதை இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அசோகவனம் என்று குறிக்கக்கூடிய வார்த்தை எது தெரியுமா.

- Advertisement -

மருதாணி தான். மருதாணி தோட்டத்தை தான் அசோகவனம் என்று சொல்லுகிறார்கள். மருதாணிக்கு சமஸ்கிருதத்தில் அசோகா என்ற பெயர் உண்டு. ராமன் சீதையை அசோகவனத்தில் இருந்து மீட்டெடுத்த நாளை இந்த அசோகா அஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுவதாகவும் வரலாற்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சரி, எதுவாக இருந்தாலும் பெண்களுக்கு நல்லது செய்யக்கூடிய நாள் என்றால் அதை நாம் ஏன் தவறவிட வேண்டும்.

பெண்கள் இந்த நாளில் என்ன வழிபாடு செய்ய வேண்டும். நாளைய தினம் (16.04.2024) எல்லோரும் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். நாளை மருதாணி செடியில் இருந்து மருதாணி இலைகளை பறித்து அரைத்துக் கொள்ள வேண்டும். வெறும் தண்ணீர் மட்டும் ஊற்றி மருதாணியை விழுதாக அரைத்து பெண்கள். உங்களுடைய கையில் இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நாளை தினம் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் இதை உங்களுடைய கையில் இட்டுக் கொள்ளலாம். உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நாளை உங்களுடைய கையில் மருதாணியை மறக்காமல் வைத்துக் கொண்டால் உங்களுடைய மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக மாறிவிடும். நாளை எந்த பெண்கள் எல்லாம் கையில் மருதாணியை இட்டுக் கொள்கிறீர்களோ அந்த பெண்களுக்கு வாழ்க்கையில் கஷ்டமே வராது.

காரணம் சீதாதேவிக்கு அசோகவனத்தில் துணையாக இருந்தது இந்த மருதாணி செடி தானே. சீதாதேவி அந்த அசோகவனத்தில் இருந்து கிளம்பும்போது, மருதாணி செடிக்கு ஒரு வரத்தை கொடுக்கின்றாள். நான் துன்பத்தில் இருந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது நீதான்.

- Advertisement -

‘உன்னை யார் கையில் இட்டு கொள்கிறார்களோ, அந்த பெண்களுக்கு கஷ்டமே வராது. உன்னை கையில் இட்டுக் கொள்ளும் பெண்களுக்கு அந்த மகாலட்சுமி ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்’ என்றவாறு வரத்தை அந்த மருதாணி செடிக்கு கொடுத்துவிட்டு செல்கின்றாள்.

உங்களுடைய வீட்டில் மருதாணி செடி இருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த மருதாணி செடியை மூன்று முறை வலம் வந்து உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நாளை மருதாணியை உங்கள் கையில் வைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை செய்து முடித்தால் கிடைக்கக்கூடிய பலன் என்ன தெரியுமா.

உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும், பணக்கஷ்டம் தீரும், கடன் சுமை குறையும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் மேலும் உங்களுடைய குடும்பம் மேலோங்கி தழைத்து நிற்கும். அரைத்த மருதாணியை நீங்கள் மட்டும் வச்சிக்கிட்டு அப்படியே விட்டுடாதீங்க. உங்களுடைய அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கொடுங்க.

இதையும் படிக்கலாமே: தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம் பரிகாரம்

அவர்கள் அதை கையில் வைத்துக் கொள்வார்கள். அவர்களுடைய கஷ்டமும் தீரும். அதற்கு உண்டான புண்ணியம் ஒரு துளி கூட குறையாமல் உங்களை வந்து சேரும். நாளை மேல் சொன்ன வழிபாட்டை செய்யக்கூடிய பெண்களுக்கு சாட்சாத் அந்த மகாலட்சுமி தேவி, சீதா தேவியின் அருள் நிச்சயம் பரிபூரணமாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -