இன்றைய காலக்கட்டத்தில் எல்லோருடைய தேவையும் பணமாக இருந்தாலும் கூட பணம் மட்டுமே தேவை கிடையாது. பணத்துடன் கூடிய தைரியம், படிப்பு, கல்வி, இப்படி அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்தால் தான் அது நிறைவான வாழ்க்கையாகும். நம் வாழ்க்கைக்கு தேவையான இந்த அனைத்து செல்வங்களையும் வழங்கக் கூடியவர்கள் தான் அஷ்டலட்சுமிகள்.
இந்த அஷ்டலட்சுமிகளும் நம் இல்லம் தேடி வந்து நம்மை வளமுடன் வாழ வைக்க பல வழிபாடுகள் பரிகாரங்கள் இருக்கிறது. அதே போல் இதற்கென ஆலய பல தரிசனங்களும் உண்டு. அதில் ஒரு சிறப்பு வாய்ந்த ஆலயத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
அஷ்டலட்சுமிகளின் அனுகிரகத்தை பெற கனக துர்கை வழிபாடு
முதலில் அஷ்டலட்சுமிகளின் அனுகிரகத்தை பெற நாம் செய்ய வேண்டியவற்றை முறையாக செய்ய வேண்டும். அதன் பிறகு தான் இறைவனுடைய அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமி தாயார் நம் இல்லத்தில் வாசம் செய்ய வேண்டும் என்றாலே நாம் இல்லம் எப்போதும் சுத்தமாகவும் மணமாகவும் இருக்க வேண்டும். இத்துடன் சேர்த்து நாமும் அதே போல இருக்க வேண்டும்.
இல்லத்தையும் நம் மனதையும் அழுக்காக வைத்துக் கொண்டு தாயாரின் அனுகிரகத்தை வேண்டினால் ஒரு நாளும் நடக்காது. இதை தெளிவாக புரிந்து கொண்டு மற்ற வழிபாடுகளையும் இந்த ஆலய தரிசனத்தையும் மேற் கொள்வது சிறந்த பலனை தரும். அஷ்டலஷ்மி களின் அனுகிரகத்தை பெற நாம் செல்ல வேண்டிய ஆலயம் விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை ஆலயம்.
இந்த கனக துர்க்கை அம்மன் ஆனவர் இந்த ஸ்தலத்தில் அஷ்டலட்சுமிகளின் நடுவில் வீற்றிருக்கிறார். இந்த அன்னையை வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்வது நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை பல மடங்கு உயர்த்தி விடும் என்று சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய முடியா விட்டாலும், மற்ற நாட்களில் வரும் சுக்கிர ஹோரையிலாவது வழிபட வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வழிபட்டு வந்து விட்டால் போதும் நம்முடைய இல்லத்திற்கு அஷ்டலட்சுமிகளும் நம்முடனே வருவார்கள் என்பது ஐதீகம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஆலயமாக இது கருதப்படுகிறது. ஆலயங்கள் எல்லாமே சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் ஒரு சில ஆலயங்கள் தனி பெரும் சிறப்பு பெற்றவையாக இருக்கும். அதில் செல்வ வளத்தை பெறுவதற்கு இந்த ஆலயம் சிறந்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் ஏற்பட வழிபாடு
ஆகையால் இந்த ஆலயத்தில் உள்ள கனகதுர்க்கை அம்மனை ஒரு முறையேனும் சென்று தரிசித்து உங்கள் வாழ்க்கையின் செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். அத்துடன் அன்னை உங்கள் வீட்டிற்கு வந்து வாசம் செய்ய நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் முறையாக கடைப்பிடியுங்கள் என் இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.