அதிர்ஷ்டம் ஏற்பட வழிபாடு

athirsta valipadu
- Advertisement -

ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கும் அந்த திறமையை கண்டறிந்து அதை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்று நம்முடைய முன்னோர்களும் சான்றோர்களும் கூறி இருக்கிறார்கள். என்னதான் திறமை இருந்தாலும் அந்த திறமையை வெளிப்படுத்த கடினமாக உழைத்தாலும் வெற்றி அடையவில்லை என்று போராடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பலரும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் என்ன? அவர்களிடம் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இல்லை. இந்த அதிர்ஷ்டம் இல்லாததால் திறமையை வைத்துக்கொண்டும் வெற்றி பெற முடியாமல் பலர் கஷ்டப்படுகிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அதிர்ஷ்டம் ஏற்பட விநாயகர் பெருமானை வழிபடும் முறையைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

ஒருவேளை சோறு கிடைப்பது கூட நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும். நமக்கு முன்பாக சென்று கொண்டிருப்பவர் இருப்பவருக்கு வடைப்பாயாசத்துடன் சாப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அவரை தொடர்ந்து பின்னால் செல்லும் நமக்கு அதில் இருந்து ஒரு பருக்கை கூட கிடைக்கவில்லை என்றால் அது துரதிஷ்டம் என்று தானே நாம் கூறுவோம். இதே போல் வேலை, படிப்பு, வாழ்க்கை, வசதி என்று நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளுக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அந்த அதிர்ஷ்டம் இருந்தால் தான் நம்முடைய வாழ்க்கையில் நம்மால் வெற்றி பெற முடியும். அதிர்ஷ்டம் இல்லை என்றால் என்னதான் முயற்சி செய்தாலும் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் துரதிஷ்டம் வந்துவிட்டது என்று கூறுவார்கள். இந்த துரதிஷ்டத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு விநாயகப் பெருமானை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

பொதுவாக காரிய வெற்றி அடைவதற்கும், கல்வியில் வெற்றி பெற, நினைத்த வேலை கிடைக்க, நல்ல வாழ்க்கை துணை அமைய, சிறப்பாக வீடு அமைய என்று அனைத்தையும் பெற்று தருவதற்கு நாம் விநாயகப் பெருமானை வழிபடலாம். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானிடம் அதிர்ஷ்டம் வேண்டும் என்றும் நாம் கேட்டு வழிபடலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் ராகு காலமான மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது நம்முடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஒருவருடைய ஜாதகம் என்பது அவரின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒன்று என்பதால் நமக்கு ஏற்பட்டிருக்கும் துரதிஷ்டம் நீங்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய யோகத்தை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அந்த யோகத்தை அதிகரிப்பதற்காக தான் விநாயகப் பெருமானிடம் நம்முடைய ஜாதகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் அவருக்கு அருகம்புல், மலர் மாலைகள் என்று நம்மால் எதை வாங்கி எடுத்துச் செல்ல முடியுமோ அதை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் செம்பருத்திப் பூவை மட்டுமாவது எடுத்துச் செல்ல வேண்டும்.

- Advertisement -

அங்கு சென்று விநாயகரின் பாதத்தில் ஜாதகத்தை வைத்து அதற்கு மேல் அவருக்காக நாம் வாங்கி வந்த மலர்களையும் வைத்து விநாயகப் பெருமானுக்கு 2 நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவரை வலம் வந்து என் வாழ்வில் இதுவரை இருந்து வந்த துரதிஷ்டம் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த முறையில் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்துவர நம் வாழ்வில் இருக்கக்கூடிய துரதஷ்டம் தூர சென்று அதிர்ஷ்டம் நம்மை நெருங்கி வர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர வேல் வழிபாடு

எதைக் கேட்டாலும் வாரி வழங்குவார் என்ற முழு நம்பிக்கையில் அதிர்ஷ்டத்தையும் கேட்டு பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -