அஷ்டலட்சுமிகளை வசமாக்கும் பொடி

astalakshmi podi
- Advertisement -

பதினாறு செல்வங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு ஆசிர்வாதம் செய்வார்கள். அப்படிப்பட்ட 16 செல்வங்களையும் நமக்கு அருளக்கூடிய தெய்வமாக அஷ்டலட்சுமி திகழ்கிறார்கள். அஷ்டலஷ்மியின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்தால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட அஷ்ட லட்சுமியையும் தங்கள் வசப்படுத்த உதவும் பொடியை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான பொருட்கள் ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் அந்த பொருட்களை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். பச்சை கற்பூரம், கிராம்பு, லவங்க பட்டை, எலுமிச்சம் பழம், செம்பருத்திப்பூ, அருகம்புல், வில்வ இலை இப்படி நாம் பல பொருட்களை கூறிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் அஷ்டலட்சுமிகளையும் ஏனைய பிற தெய்வசக்தியையும் வசமாக்க கூடிய பொருட்களை நாம் பொடியாக செய்து வீட்டில் வைக்கும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அனைத்து தெய்வங்களையும் வசமாக்கும் பொருளாக திகழக்கூடியது தான் மல்லிகைப்பூ. மல்லிகை பூவுக்கு என்று தெய்வீக அம்சம் அதிகமாகவே இருக்கிறது. எந்த தெய்வத்திற்கும் நாம் இந்த பூவை வழிபாட்டிற்காகவும், பூஜைக்காகவும் உபயோகப்படுத்தலாம். இந்த பூ இருக்கும் இடத்தில் அனைத்து விதமான தெய்வ சக்தியும் நிறைந்திருக்கும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட மல்லிகை பூவை வாங்கி நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அஷ்ட லட்சுமிகளை வசமாக்க கூடிய பொருளாக புரசு குச்சி திகழ்கிறது. இந்த குச்சி யாகம் வளர்க்கும் பொழுது உபயோகப்படுத்தக்கூடிய குச்சியாகும். இது யாகப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இருப்பினும் அது புரசுக்குச்சி தானா என்பதை நன்றாக அறிந்த பிறகு உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த குச்சியையும் வாங்கி நன்றாக காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த புரசு குச்சி பொடி 60 சதவீதம் மல்லிகை பூ பொடி 40 சதவீதம் என்ற விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பொடியை உபயோகப்படுத்தி நம் வீட்டு பூஜை அறையில் கோலம் போட வேண்டும். வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. இந்த இரண்டு பொருட்களும் மிகவும் புனிதமான பொருட்கள் என்பதால் அது கால் படும் இடத்தில் இருக்கக் கூடாது. இவ்வாறு பூஜை அறையில் நாம் கோலம் போடும் பொழுது அந்த பூஜையறை அனைத்து தெய்வங்களையும் ஈர்த்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும்.

மேலும் இந்த பொடியை பணம், நகை வைக்கும் பெட்டியில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு பேப்பரில் இந்த பொடியை வைத்து நன்றாக மடித்து பணம் வைக்கும் பர்சில் வைத்துக் கொள்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்.

ஒவ்வொரு மூலிகைக்கு உரிய பலனை அறிந்து அதன் முறையாகவும் நம்பிக்கையுடனும் பயன்படுத்தும் பொழுது அதன் பலனை முழுமையாக அடைய முடியும்.

- Advertisement -