கண் திருஷ்டி நீங்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்.

varahi
- Advertisement -

முன்னோர்கள் வழிபாட்டிற்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும், இந்த அமாவாசை நாள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்படுகிறதோ, அதே அளவு எதிர்மறை ஆற்றலை அடித்து விரட்டுவதற்கும் இந்த அமாவாசை நாள் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

கண் திருஷ்டி, செய்வினை பாதிப்பு, ஏவல் பில்லி சூனியம், மருந்து வைத்தது, எதிரி தொல்லை இப்படிப்பட்ட எல்லா எதிர்மறை ஆற்றலில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள, நம்மை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றல் நம் உடம்பிலிருந்து வெளியேறி செல்ல, அமாவாசை அன்று நாம் என்ன பரிகாரம் செய்வது, நமக்கு நாமே இந்த பரிகாரத்தை செய்து கொண்டாலும் நிச்சயம் பலன் கிடைக்கும், அமாவாசை அன்று திருஷ்டி சுத்தி போடும் முறையைப் பற்றிய ஒரு அரிதான தகவலை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அமாவாசை திருஷ்டி கழிக்கும் முறை

நாளைக்கு அமாவாசை வரவிருக்கிறது அல்லவா. மதியம் 12 மணிக்கு இந்த திருஷ்டியை சுற்றி போடலாம். முடியாதவர்கள் இரவு 9 மணிக்கு மேல் இந்த திருஷ்டியை சுற்றி போட்டுக் கொள்ளலாம். வீட்டில் எத்தனை பேருக்கு திருஷ்டி சுத்த போறீங்களோ, அவங்களுக்கு தனித்தனி எலுமிச்சம் பழத்தை தான் பயன்படுத்த வேண்டும்.

அதாவது ஒருவருக்கு ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து திருஷ்டி கழிக்கணும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான், சிறியவர்களுக்கு இந்த எலுமிச்சம் பழத்தை சுற்றி போட வேண்டும். ஒரு வேலை கணவன், மனைவி, குழந்தை இருக்கக்கூடிய வீடாக இருந்தால் மனைவி உங்களுடைய குழந்தைக்கு திருஷ்டியை சுற்றி போடுங்கள். கணவன் தனக்குத்தானே எலுமிச்சம் பழத்தை சுற்றி போட்டு திருஷ்டி கழித்துக் கொள்ளலாம். மனைவி தனக்கு தானே எலுமிச்சம் பழத்தை சுற்றி போட்டு திருஷ்டி கழித்துக் கொள்ளலாம். (கணவர், விருப்பப்பட்டால் மனைவிக்கு இந்த திருஷ்டியை சுற்றி போடலாம்.)

- Advertisement -

ஒரு மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கருப்பு நிறத்தில் ஒரு மை வைக்க வேண்டும். கண்களுக்கு இட்டுக் கொள்ளும் மை, மஸ்காரா, எது இருந்தாலும் வைங்க. அப்படி இல்லை என்றால் சமைக்கும் பாத்திரத்தில் சமைக்கும் இடத்தில் அடுப்புக்கரி இருந்தாலும் அதை கொஞ்சம் எண்ணெய் விட்டுக் குழைத்து எடுத்தும், இந்த மஞ்சள் நிற எலுமிச்சம் பழத்தில் ஒரு பொட்டு வைக்கலாம். விரலில் கருப்பு மையை தொட்டு, எலுமிச்சம் பழத்தின் மேல் ஏதாவது ஒரு இடத்தில், ஒரு பொட்டு வச்சுக்கோங்க.

உங்களுக்கு நீங்களே திருஷ்டி சுற்றி போட்டுக் கொள்வதாக இருந்தால், நீங்கள் கிழக்கு பார்த்தவாறு நின்று உங்களுடைய இடது கையில் இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து, ஒரு உக்கிரமான அம்மன் பெயரை மூன்று முறை சொல்ல வேண்டும். அங்காள பரமேஸ்வரி, காளி, வாராஹி, துர்க்கை அம்மன், உங்களுக்கு எந்த அம்பாள் பிடிக்குமோ அந்த அம்பாளின் பெயரை மூன்று முறை சொல்லுங்கள். அந்த அம்பாளை முழு மனதோடு நம்பி வேண்டிக்கோங்க.

- Advertisement -

பிறகு கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை உங்களுடைய தலையை இடதுபுரத்திலிருந்து வலப்புறமாக, ஆன்டி கிளாக் வைஸ் 3 முறை சுற்றி, உங்கள் உச்சம் தலையிலிருந்து உள்ளம் கால் வரை ஏற்ற இறக்கமாக மூன்று முறை ஏற்றி இறக்கி, இந்த எலுமிச்சம் பழத்தை நான்கு பாகங்களாக வெட்டி பிரித்துக் கொள்ள வேண்டும். நான்கு துண்டுகளாக வெட்டிடாதீங்க.

எலுமிச்சம் பழத்திற்கு அடிப்பாகம் வெட்டப்படக்கூடாது. மேல் பாகம் மட்டும் நான்காக வெட்டப்பட்டு இருக்க வேண்டும். அதன் பிறகு வெட்டிய இந்த எலுமிச்சம் பழத்தில் உங்கள் வாயால் 3 முறை காற்றை ஊத வேண்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து சுருட்டி கொண்டு போய் வீட்டுக்கு வெளியில் கால் படாத இடத்தில் போட்டு விட்டு வந்து விடுங்கள்.

உங்களால் இப்படி வெளியில் இதை தூக்கி போட முடியாது என்றால் குப்பைத் தொட்டியில் போட்டு குப்பை தொட்டியை வீட்டிற்கு வெளியே வைக்கவும். இப்படி திருஷ்டி கழித்த எலுமிச்சம் பழத்தை இரவு நேரத்தில் வீட்டில் வைக்கவே கூடாது. நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் இந்த எலுமிச்சம்பழத்தை வைத்துவிட்டு விடிந்ததும் கூட தூக்கி தூர போடுங்கள்.

நீங்கள் அடுத்தவர்களுக்கு திருஷ்டி சுற்றுவதாக இருந்தாலும் இதை முறைதான். அந்த நபரை கிழக்கு பார்த்தவாறு அமர வையுங்கள். நீங்கள் மேற்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். குறிப்பிட்ட அந்த நபருக்கு மேல் சொன்னபடி திருஷ்டியை கழிக்க வேண்டும் இந்த முறையில் அமாவாசை நாளில் திருஷ்டி கழித்தால் உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும்.

இதையும் படிக்கலாமே: 12-12 அமாவாசையில் பணக்கஷ்டம் தீர செய்ய வேண்டிய பரிகாரம்.

எதிரிகள் தொல்லை விலகும். எவ்வளவு பெரிய ஏவல் பில்லி சூனியத்தால் தொல்லை இருந்தாலும் அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை வராது நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -