புதாதித்ய ராஜயோகம் பெறும் ராசிகள்

puthan suriyan astrology
- Advertisement -

ஜோதிடத்தில் எப்பொழுதும் கிரகங்களின் மாற்றங்களாலும் இணைவாலும் 12 ராசிக்காரர்களுக்கும் அசுப பலன்களையும் சுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் மார்ச் 7ஆம் தேதி புதபகவான் மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். மார்ச் 14ஆம் தேதி சூரியனும் அதே ராசியில் நுழைகிறார். இந்த இணைவால் மீனத்தில் புதாதித்ய ராஜயோகம் உருவாக போகிறது.

ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் இணையும் போது இது போன்ற யோகங்கள் உருவாகும். அந்த வகையில் உருவாகக் கூடிய இந்த யோகம் மார்ச் மாதம் முழுவதும் தொடரும். இதனால் சில ராசிகள் பெரும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

புதாதித்ய ராஜயோகம் பெறும் 4 ராசிக்காரர்கள்

ரிஷபம்

இந்த ராஜ யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கப் போகிறது. இந்த யோகத்தின் பலனாக இவர்களின் பொருளாதார நிலை பல மடங்கு உயரும். சமூகத்தில் நல்ல மதிப்பை பெறுவார்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பதுடன் புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது வரை எதிர்பார்த்த வாய்ப்புகள் கைகூடும். இலக்கை அடையக் கூடிய அருமையான காலக்கட்டம் இது. பணவரவில் பல மடங்கு முன்னேற்றம் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜ யோகம் நற்பலனைகளை வாரி வழங்க இருக்கிறது. இந்த யோகத்தின் பலனாக அதிக பண வாய்ப்பு பெற போகிறீர்கள். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் துணையுடன் ஏற்பட்ட மன குழப்பங்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் பெரிய வெற்றியை காண்பீர்கள். வேலையிடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார நிலைமை முன்பை விட பல மடங்கு உயரக் கூடிய காலம் இது.

- Advertisement -

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த புதாதித்ய ராஜ யோகம் நல்ல பலன்களை தர இருக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் வீடு மனை சொத்து போன்ற ஆதாயங்களை இந்த காலக்கட்டத்தில் அடைவார்கள். தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு அதில் நல்ல இலாபத்தை பெறுவார்கள் பணம் சம்பாதிக்கக்ஸகூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவு பலப்படும். பணவரவு தடை இன்றி சுமூகமாக இருக்கும்.

மீனம்

மீனத்தில் உருவாகக் கூடிய இந்த புதாய ராஜ யோகத்தின் முழு பலனும் இந்த ராசிக்கு தான் கிடைக்கப் போகிறது. இதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். புதிய வேலை வாய்ப்புகளை தொடங்கக் கூடிய யோகம் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் இலக்கை அடைவீர்கள். வருமானம் வெகுவாக உயரும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறலாம். பண வரவிற்கு குறைவிருக்காது.

இதையும் படிக்கலாமே: அகண்ட சாம்ராஜ்ய யோகம் பெரும் லக்கினங்கள்

இந்த புதாதித்ய ராஜயோகத்தால் கூடுதல் பலனை பெறக் கூடிய நான்கு ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிடம் குறித்த பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான். இதிலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -