அட்சய திருதியை(14/5/2021) அன்று சமையலறையில் இதை செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் வளர்ந்து கொண்டே செல்லும்!

atchaya-thiruthiyai-mochai
- Advertisement -

பொதுவாக ஒவ்வொரு அட்சய திரிதியை அன்றும் நகை கடைகளில் கூட்டம் அலை மோதுவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருப்போம். அலை கடலென திறலும் மக்கள் கூட்டத்தை நகை கடைகளில் பார்க்கும் பொழுது அந்த நாளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை நம்மால் உணர முடிகிறது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் அது மென்மேலும் பெருகிக் கொண்டே செல்லும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அத்தகைய நன்னாளில் சமையலறையில் நாம் இதை செய்யும் பொழுது வீட்டில் செல்வம் வளர்ந்து கொண்டே செல்லும்! அப்படி நாம் என்ன தான் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

atchayathiruthiyai

அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதற்கு மட்டுமல்ல! அன்றைய நாளில் நாம் எந்த பொருளை வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது உண்மை. நம்மால் வாங்க முடிந்த பொருட்களை அன்றைய நாளில் வாங்கினால் அந்த பொருளானது அதிக நாட்கள் நீடித்து உழைக்கும் என்றும் கூறப்படுகிறது. பல நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை அக்ஷய திருதியை அன்று வாங்கி பாருங்கள்! அடுத்தடுத்து உங்களுடைய விருப்பமான பொருட்களை தடையில்லாமல் நீங்கள் வாங்கி மகிழலாம்.

- Advertisement -

அக்ஷய திருதியை என்றாலே தங்கம் தான் வாங்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நியதி. அன்றைய நாளில் வீட்டிற்கு மகாலட்சுமி தாயை வரவேற்க செய்ய வேண்டிய சில விஷயங்களை செய்யும் பொழுது எளிதாக செல்வ வளத்தை பெற முடிகிறது. மகாலட்சுமி கல் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. ஆகவே வருகின்ற அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாவிட்டாலும் கூட கல் உப்பை மட்டுமாவது வாங்கி வையுங்கள்! வீட்டில் வறுமை இன்றி செல்வ நிலையானது நிச்சயமாக உயரும்.

salt

அக்ஷய என்பதற்கு வளர்தல் என்பது பொருளாகும். புராணத்தில் அட்சய பாத்திரம் என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்போம். அந்த பாத்திரத்தில் நாம் எதைப் போட்டாலும் அது பன்மடங்கு பெருகி நமக்கு கொடுக்கும். அதே போல தான் அக்ஷய திருதியை நன்னாளில் நாம் வாங்கும் எந்த பொருளும் நமக்கு நீடித்து உழைக்கவும் செய்யும், அதே போல பன்மடங்கு பெருகவும் செய்யும். கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் பணம் சேர கல் உப்பு புதிதாக கடைக்கு சென்று வாங்கி வருவார்கள்.

- Advertisement -

அக்ஷய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தின கற்கள் போன்ற விஷயங்களை வாங்கும் பொழுது அதிர்ஷ்டம் வரும் என்பார்கள். அந்த வரிசையில் சுக்ரனுக்கு உகந்த வெள்ளி அல்லது வைரம் வாங்கினால் சுக போக வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. சுக்கிரன் சுக போக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர். அக்ஷய திருதியை நாளில் கண்ணாடி பொருட்கள், வெள்ளி பொருட்கள், வைர கற்கள் போன்றவை வாங்கினால் யோகம் உண்டு.

mochai

மேலும் சுக்கிரனுக்கு உரிய பச்சரிசி அல்லது மொச்சை கொட்டை இவற்றில் வெள்ளி அல்லது வைர நகைகளை வெள்ளை பட்டு துணியில் முடிந்து வைப்பதால் வீட்டில் செல்வமானது வளர்ந்து கொண்டே செல்லுமாம். வைர நகைகளை நம்மால் வாங்க முடியாவிட்டாலும், ஒரு சிறு வெள்ளி நாணயம் அல்லது மோதிரம் போன்ற ஏதாவது ஒன்றை புதிதாக வாங்கி வெள்ளை நிற பட்டு துணியில் முடிந்து பச்சரிசி அல்லது மொச்சை கொட்டையில் போட்டு வைத்து விடலாம். அடுத்த அட்சயதிருதியை வரும் வரை அது அப்படியே இருப்பது நல்லது. எப்பொழுதும் மொச்சை கொட்டை வாங்கி வையுங்கள். உப்பு, ஊறுகாய், மொச்சைக்கொட்டை, அரிசி போன்ற பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் குறையக் கூடாது.

- Advertisement -