அத்தி வரதர் குறித்த மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தின் பதில் இதோ

varadhar-temple
- Advertisement -

கடந்த ஒன்றரை மாதமாக உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் இருந்தது. நேற்றைய தினத்தோடு பக்தர்களுக்கான அத்தி வரதர் தரிசனம் முடிவடைந்து, இன்றைய தினம் அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைப்பதற்கான பூஜைகள் மற்றும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அத்தி வரதரை மீண்டும் குளத்துக்குள் வைப்பது குறித்த வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சென்னையை சேர்ந்த பக்தர் ஒரு காஞ்சிபுரம் அத்தி வரதர் பெருமாள் கோயில் குளத்தில் அத்தி வரதர் வைக்கப்படும் அறையின் தூய்மை பற்றிய வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படவுள்ள நீரின் தன்மை குறித்து ஆக.19 அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பிறகு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அத்திவரதர் வைக்கப்படும் இடத்தை நிரப்ப 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும் அந்த அறையில் நிரப்படவிருக்கும் நீர் குடிப்பதற்கு கூட தகுதியான தண்ணீர் எனவும் பாதாள அறையை நிரப்ப பொற்றாமரைக் குளத்து நீருடன் சேர்த்து ஆழ்துளை கிணற்று நீரையும் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

பிறகு நீதிபதி அனந்த சரஸ் குளத்தை சுத்தம் செய்ய சி.ஐ.எஸ்.எப் வீரர்களை ஏன் அனுப்பக்கூடாது? என கேள்வி எழுப்பினார். இது குறித்து உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது அனந்தசரஸ் குளத்தை சுத்தம் செய்ய 50 முதல் 75 சி ஐ எஸ் எப் வீரர்களை அனுப்ப நாங்கள் தயார் என்றும் தமிழக அரசு சார்பில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் உடனே செல்வோம் என தெரிவித்தனர்.

athi varadhar

பிறகு தமிழ்நாடு அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் “அனந்தசரஸ் குளத்தை இத்தனை நாட்களாக அறநிலையத் துறையுடன் சேர்ந்து உள்ளூர்வாசிகள் திறம்பட 90 சதவீத பணிகளை சிறப்பாக செய்து முடித்துள்ளனர் என கூறினார். இன்னும் மீதமிருக்கும் பணிகளை இரவோடு, இரவாக முடிக்க அனைத்து வேலைகளும் துரிதமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை மேற்பார்வை செய்ய கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இறுதிகட்டப் பணிகளையும் நாங்களே செய்துகொள்கிறோம் என்றும் மேலும் அண்மையில் பெய்த மழையின் காரணமாக அத்திவரதர் வைக்கப்படும் அறைக்குள் தானாகவே நீர் சுரந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

court

அதையேற்ற நீதிபதி நீங்களே அந்தக் குளத்தை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யுங்கள் என்றும் கூறினார். மேலும் அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் அறையை சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். அது போல அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்பப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் ஆக.19 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையும் படிக்கலாமே:
தினசரி பூஜையின் போது இவற்றை செய்தால் பலன் அதிகம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar room in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar kovil in Tamil or Athi varadhar sirappugal in Tamil.

- Advertisement -