உங்கள் கையால் இந்த பொருளை மண்ணில் புதைத்து வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென கொட்டும்.

vasambu-murugan
- Advertisement -

நிறைய பேருக்கு மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். நமக்கு மட்டும் நல்லது நடக்கவில்லை. நமக்கு மட்டும் எந்த ஒரு அதிர்ஷ்டமும் அடிக்க மாட்டேங்குது. எனக்கு மட்டும்தான் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படும் நிலை உள்ளது என்று நினைத்து நினைத்து அவர்களை அவர்களே தாழ்த்திக் கொள்வார்கள். இப்படி தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்களால் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயித்து வரவே முடியாது. அவர்களுக்குள் இருக்கும் திறமை கூட அப்படியே புதைந்து தான் கிடக்கும். தாழ்வு மனப்பான்மை, திறமையை வெளியிடாமல் தடுக்கும். ஆக உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதிலிருந்து முதலில் நீங்கள் வெளிவர வேண்டும். நம்மால் எல்லாம் முடியும். நாமும் மற்றவர்களைப் போல வாழ்வோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்.

எல்லோருக்கும் நல்லது நடக்குது. எனக்கு மட்டும் நல்லதே நடக்க மாட்டேங்குது அப்படின்றவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு பதிவு தான் இது. யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேண்டும் என்று நினைக்கிறீங்களோ அவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் வசம்பு. இந்த வசம்பை பேரம் பேசாமல் கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய வசம்பை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு சொந்த வீடு இருந்தால் உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில், உள்ள பகுதியில் மண்ணைத் தோண்டி இந்த வசம்பை புதைக்கலாம். இரண்டு வசம்பு புதைக்கலாம். நான்கு வசம்பு புதைக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். வெறும் ஒரு வசம்பு புதைத்தாலும் கூட அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எல்லோராலும் இப்படி மண்ணில் வசம்பை புதைத்து வைக்க முடியாது. காரணம் வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஃபிளாட்டில் வசிப்பவர்கள் இவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது.

கொஞ்சமாக எங்கிருந்தாவது நல்ல மணலை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். ஒரு சிறிய தொட்டியில் அந்த மணலை கொட்டி, இந்த வசம்பை போட்டு மேலே மீண்டும் மணலை கொட்டி புதைத்து உங்களுடைய வீட்டில் தென்மேற்கு மூலையில் வைத்துக் கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் ஒரு பச்சை நிற சதுர வடிவ துணியில் கொஞ்சமாக மண்ணை போட்டு அந்த மண்ணுக்கு நடுவே வசம்பை போட்டு மறைத்து முடிச்சாக கட்டி உங்களுடைய வீட்டின் தென்மேற்கு மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் வைத்தாலும் சரிதான். ஆக மொத்தத்தில் உங்கள் கையால் புதைக்கப்பட்ட இந்த வசம்பு மண்ணுக்குள் இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும் என்ற ஒரு தாந்திரீக பரிகாரம் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வசிய சக்தி நிறைந்த இந்த வசம்பை மண்ணில் புதைக்கும் போது இந்த பிரபஞ்சத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை அதிர்ஷ்டமும் உங்களுக்கு வசியம் ஆக வேண்டும்.

இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை நல்லதையும் நீங்கள் வசியம் செய்து வாழ்வில் வாழ்வாங்கு வாழ வேண்டும், அதிர்ஷ்டத்தோடு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இந்த வசம்பு உங்களுக்கு வளமான வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -