அதிர்ஷ்ட லட்சுமிக்கே உங்கள் பீரோவில் நிரந்தரமாக தங்க ஆசை வந்துவிடும். இந்த ஒரு படத்தை, உங்கள் வீட்டு பீரோவில் ஒட்டி வைத்தால்!

- Advertisement -

நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு அதிர்ஷ்ட காத்து ஒரு முறை நம் பக்கம் வீசினால் கூட போதும். நம்முடைய வாழ்க்கையே தலைகீழாக மாற்றும் அளவிற்கு அதிர்ஷ்டலட்சுமிக்கு சக்தி உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அந்த அதிர்ஷ்ட லட்சுமியை உங்களிடம் நிரந்தரமாக எப்படி தங்க வைத்துக் கொள்வது? அந்த அதிர்ஷ்டலட்சுமியே உங்களுடைய பீரோவில் வந்து அமர வேண்டும். அதுவும் நிரந்தரமாக அமர வேண்டும். அந்த அளவிற்கு அதிர்ஷ்டலட்சுமியின் மனதை நாம் வசியப் படுத்தவேண்டும். அதிர்ஷ்ட லட்சுமிக்கே ஆசை வரவேண்டும்! இந்த வீட்டு பீரோவை விட்டு வெளியில் செல்லக்கூடாது. இங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்று! அதிர்ஷ்ட லட்சுமிகே ஆசையே வரவழைக்க கூடிய, அப்படிப்பட்ட அந்த படம், எந்தப் படம்? நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

adhirshta-lakshmi

அதிர்ஷ்ட லட்சுமி எப்போதுமே, ஆந்தையை தன் அருகில் வைத்திருப்பார்கள். அதிர்ஷ்ட லக்ஷ்மியின் வாகனமாக விளங்குவது இந்த ஆந்தை. ஆந்தையோடு கொண்ட அதிர்ஷ்ட லட்சுமியை, உங்களுடைய வீட்டு பீரோவில் ஒட்டி வைத்து விட்டால் போதும். பீரோவிற்கு உள்பக்கம் பார்த்தவாறு இந்த படத்தை ஒட்ட வேண்டும். பீரோவின் கதவு பகுதிகளில், லாக்கரின் கதவு பகுதிகளுக்கு உள்பக்கம், இதை ஒட்டி வைத்தால், அதிஷ்டலட்சுமி உங்கள் வீட்டு பீரோவை உள்ளே பார்த்தவாறு இருப்பார்கள். வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆசையே லட்சுமி தேவிக்கு வராது. நிரந்தரமாக உங்களுடைய வீட்டு பீரோவில் தங்கி விடுவார்கள்.

- Advertisement -

இந்த அதிர்ஷ்ட லட்சுமியின் படம் கடைகளில் கிடைத்தால், அதை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையிலும் வைத்து வழிபடலாம். வீட்டிற்கு அவ்வளவு சுபிட்சத்தை தேடித் தரக் கூடிய, அதிர்ஷ்டத்தை தேடித் தரக் கூடிய சக்தி இந்த அதிர்ஷ்ட லட்சுமியின் புகைப்படத்திற்கு உண்டு. பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் மகாலட்சுமி வழிபாடு செய்வார்கள். அதிர்ச்சி லட்சுமியின் புகைப்படம் நம்முடைய வீட்டில் இருந்தாலும் தவறு எதுவும் கிடையாது. ஆந்தை யோடு கொண்ட அதிர்ஷ்ட லட்சுமியை தாராளமாக வாங்கி வைத்துக்கொள்ளலாம். கடைகளில் இந்த அதிர்ச்சி லக்ஷ்மியின் படம் கட்டாயம் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால், புகைப்படங்களை கலர் பிரிண்ட் எடுத்து கூட, ஒட்டி வைத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.

adhirshta-lakshmi1

ஆந்தையை அப சகுனமாக எப்போதுமே நினைக்கக்கூடாது. ஆந்தை என்பது அதிர்ஷ்ட லட்சுமியின் மறுஉருவமாக சொல்லப்பட்டுள்ளது. சிறிய அளவிலான அந்தையோடு கூடிய அதிர்ஷ்டலட்சுமியின் புகைப்படம் கிடைத்தால், மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம். பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க, இந்த அதிர்ஷ்ட லட்சுமி உங்களுக்கு துணைபுரிவாள். உங்கள் பர்ஸ்சும் அதிர்ஷ்டமான பர்ஸாக மாறும்.

- Advertisement -

தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டும் என்றாலும், இந்த அதிர்ஷ்ட லக்ஷ்மியின் திருவுருவப்படத்தை அலுவலகங்களிலும், தொழில் செய்யும் இடத்திலும், கடைகளில் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது.

வெறும் பணம் காசுக்கு மட்டுமல்ல. நீங்கள் பிறந்ததிலிருந்தே கஷ்டத்தை அனுபவித்து வருகிறீர்கள் என்றாலும் கூட, அந்த கஷ்டமானது எதிர்பாராமல் உங்களை விட்டு விலகிவிடும். நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். எல்லோராலும் நீங்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்று பேசப் பட்டிருந்தாலும், அந்த நிலைமையானது மாறி, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லும் அளவிற்கு உங்களது வாழ்க்கைத் தரம் உயரும் என்பதை இந்த படத்தை வைத்து வழிபாடு செய்த பின்புதான் உங்களால் உணர முடியும்.

- Advertisement -

adhirshta-lakshmi2

பணம் சேர வேண்டும். அதிர்ஷ்டமானவர்களாக மாற வேண்டும், வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும், என்று பல பரிகாரங்களை செய்தவர்கள், பரிகாரங்களில் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, இந்த ஒரு படத்தை வைத்து, இரு கண்கள் குளிர பார்த்து, மனதார வழிபாடு செய்து தான் பாருங்களேன்! வாழ்க்கையில் அதிர்ஷ்ட காத்து அடிக்க இதை விட சுலபமான வழி வேறு ஏதும் உண்டா?

இதையும் படிக்கலாமே
தலையில் வைக்கும் பூவை பெண்கள் தப்பி தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! உங்கள் கையில் பணம் சேரவே சேராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -