இந்த ஒரு நோட்டு உங்க கைக்கு வந்துட்டா, பிறகு பல லட்சங்கள் உங்கள் கைக்கு வரப்போகுதுன்னு அர்த்தம். இந்த நோட்டு கைக்கு கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க.

cash-mahalakshmi
- Advertisement -

சில பொருட்கள் நமக்கு எந்த ரூபத்திலாவது, ஏதாவது ஒரு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து கையில் சேர்க்கும். அப்படி அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒரு, ரூபாய் நோட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஒரு நோட்டு கைக்கு வந்தால் உடனே நாம் லட்சாதிபதியாக மாறி விடுவோமா. அப்படி கிடையாது. இந்த ஒரு நோட்டு உங்களுக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டமான நிறைய நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும். உதாரணத்திற்கு வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு, வருமானத்திற்கான ஒரு வழியைத் தேடித் தரும். கடனோடு கஷ்டப்படுபவர்களுக்கு கடனை படிப்படியாக குறைக்க ஒரு வழியை காட்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க இது ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டம் தரும் ரூபாய் நோட்டு பரிகாரம்:
பொதுவாக பச்சை நிறம் குபேரருக்கு உரிய நிறம். அதாவது பச்சை குங்குமம் குபேரருக்கு உரியது. இந்த பச்சை நிறத்தில் இருக்கும் எந்த நோட்டு உங்கள் கைக்கு வந்தாலும் சரி, 5 ரூபாய் நோட்டு, 20 ரூபாய் நோட்டு, 50 ரூபாய் நோட்டு எது உங்களுக்கு கிடைத்தாலும் அதிலிருந்து ஒரே ஒரு நோட்டை மட்டும் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு நோட்டை செலவு செய்யாதீங்க.

- Advertisement -

இதன் மேலே நீங்கள் தடவ வேண்டிய பொருள் இரண்டு. பச்சை நிறத்தில் இருக்கும் குங்குமம், வாசனை மிகுந்த புனுகு. இரண்டுமே பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி அதை இந்த நோட்டின் நடுப்பக்கத்தில் லேசாக தடவ வேண்டும். இதை நாம் செலவு செய்ய போவது கிடையாது. பொதுவாக செலவு செய்யும் நோட்டில் எதுவும் எழுதக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது. ஆகவே இந்த தவறை எல்லா நோட்டிலும் செய்யாதீங்க. ஒரே ஒரு ஐந்து ரூபாய் நோட்டு, அப்படி இல்லையா ஒரே ஒரு 20 ரூபாய், நோட்டு அதுவும் இல்லை என்றால் ஒரே ஒரு 50 ரூபாய், மட்டும் பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் போதும். (மூன்று நோட்டுகளும் வேண்டாம். ஒரு நோட்டு போதும்.)

இந்த இரண்டு வாசம் நிறைந்த பொருட்களை அந்த நோட்டில் தடவி அப்படியே மடிக்க கூடாது. விரித்து உங்கள் பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். உங்களுடைய பண பெட்டியல் மேலும் பணம் சேர இந்த பரிகாரம் வழி செய்யும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். அந்தப் பணம் நிறைய பணங்களை ஈர்ப்பதற்காகத்தான் வசியம் நிறைந்த அந்த இரண்டு பொருட்களையும் அந்த நோட்டில் தடவி வைத்திருக்கிறோம். இது ஒரு எளிமையான சின்ன பரிகாரம்தான். முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே ஒரு சில நாட்களில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

பொதுவாகவே 786 இந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த பச்சை நிற நோட்டில் இந்த மூன்று எண்கள் சேர்ந்தது போல உங்களுக்கு எப்பவாவது நோட்டு கிடைத்தால், அதை செலவு செய்யாமல் பத்திரமாக வைத்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பணம் எளிமையாக வசியமாகும். பணம் வசியம் செய்வதற்கு இவ்வளவு எளிய வழிபாட்டு முறைகள், எளிய பரிகாரங்கள் இருந்தாலும் பணத்தை சம்பாதிப்பதற்கு கடின உழைப்பை, நீங்கள் தான் போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஏழரை சனி காலத்தில் இதை செய்தால், ‘நான் அவர்களுக்கு எந்த துன்பமும் தர மாட்டேன்’ என்று சனிபகவானே வாக்கு கொடுத்திருக்கிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டியது என்னென்ன?

என்ன பரிகாரம் செய்தாலும் கூரையை பிச்சிக் கொண்டு பணம் வீட்டிற்குள் கொட்டவே கொட்டாது. எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வருமானம் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும். இது எதார்த்தமான உண்மை. நிறைய பேர் இதை புரிந்து கொள்வதே கிடையாது. எந்த வேலையும் செய்யாமல் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை முதலில் வெளியே தூக்கி போட்டுவிட்டு, பரிகாரத்தோடு சேர்த்து விடாமுயற்சியை முதலீடாக போட்டு, எல்லோரும் பணக்காரராக அந்த இறைவனிடம் வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -