கடன் தீர வேல் வழிபாடு

vel valipadu
- Advertisement -

கடனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கடனால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அதனால் ஏற்பட்ட அவமானங்கள் என்ன? கஷ்டங்கள் என்ன? என்பது நன்றாகவே தெரியும். இந்த அனுபவம் பலரது வாழ்க்கையில் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி அப்படிப்பட்ட கடன் ரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்களும் அந்த கடனிலிருந்து வெளியில் வரவேண்டும் என்று நினைப்பவர்களும் வேலை வைத்து எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் ரீதியான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவானே. செவ்வாய் பகவானின் அதிபதியாக திகழக் கூடியவர் முருகக்கடவுள். மேலும் செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு மட்டும் உகந்த கிழமையாக இல்லாமல் அம்மனுக்கும் உகந்த கிழமையாக திகழ்கிறது. அம்மன் தன்னுடைய மறு அவதாரமாக தான் வேலை தயார் செய்து முருகனின் கரங்களில் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆக வேல் என்பது முருகன் மற்றும் அம்மனின் சொரூபமாக திகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

எப்படி அசுரர்களை அழித்து தேவர்களை காப்பாற்றியதோ அதேபோல் நம்மிடம் இருக்கக்கூடிய கர்ம வினைகளை நீக்கி நம்மை காப்பாற்றும் அற்புதமான ஒன்றாக தான் வேல் திகழ்கிறது. வேலுக்காகவே வேல் மாறல் என்ற ஒரு நூல் இருக்கிறது. இந்த நூலை பாராயணம் செய்யும்பொழுது மனிதனுக்கு இருக்கக் கூடிய அனைத்து விதமான பிணிகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. பிணிகள் என்பது மனிதனின் வாழ்க்கையில் பிணைக்கப்பட்ட கஷ்டங்கள் என்று அர்த்தம். அந்த கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கக்கூடிய வல்லமை பெற்றதாக தான் வேல் மாறல் திகழ்கிறது.

முருகனுக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு அவரின் கையில் இருக்கும் வேலிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்ய நம் வாழ்வில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும் என்பது பலரும் அனுபவபூர்வமாக அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட வேலை வைத்து கடன் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக முருகனுக்கு உரிய கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிலேயே நாம் வேலை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய நம்முடைய கடன் பிரச்சினை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நம்முடைய உள்ளங்கை அளவிற்கு சிறிய வேலாக வாங்க வேண்டும். இந்த வேல் ஐம்பொன் அல்லது வெள்ளியில் இருப்பது சிறப்பு. இயலாதவர்கள் சாதாரணமாக கூட வாங்கிக் கொள்ளலாம்.

முதலில் புதிதாக வாங்கிய வேலை மஞ்சள் கலந்த பன்னீரில் சுத்தமாகக் கழுவ வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். ஈரம் இல்லாமல் சுத்தமான துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கிளாஸ் எடுத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதற்குள் வேலை வைக்க வேண்டும். பிறகு வேலிற்கு சந்தனம் குங்குமம் வைத்து கூர்மையான பகுதிக்கு கெட்டியாக சந்தனத்தை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு வேலிற்கு செவ்வரளி பூக்களை மாலையாக கட்டி சூட்டலாம். பிறகு உதிரியான செவ்வரளி பூக்களை எடுத்து வைத்துக்கொண்டு “ஓம் ஷம் சரஹணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்தவாறு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் இந்த முறையில் நாம் வேலை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டமான கடன் பிரச்சினையில் இருந்து நம்மால் எளிதில் வெளியே வருவதற்கு முருகப்பெருமானின் அருள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரங்களை தரும் பங்குனி உத்திரம்

பெரிதும் செலவில்லாமல் மிகவும் எளிதில் மனதார செய்யக்கூடிய இந்த வழிபாட்டை நாமும் செய்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனையிலிருந்து வெளியில் வந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -