வீட்டில் அதிர்ஷ்டம் பெருக, முயற்சித்த அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்க, இந்த ஒரு சிலையை வீட்டில் இப்படி வைத்தாலே போதும். வாஸ்து குறைபாடுகள் நீங்கி அனைத்து வளங்களையும் பெறலாம்.

vastu amai
- Advertisement -

ஒவ்வொரு வீடும் ஆலயமாக கருதப்பட வேண்டும். அவ்வாறு ஆலயமாக வீடு திகழ்வதற்கு வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும். இதற்கு மிகவும் முக்கியமாக நமக்கு துணை புரிவதுதான் வாஸ்து. வாஸ்துபடி ஒருவர் வீட்டை அமைத்தால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலையில் வாஸ்து குறைபாடு இன்றி எந்த இல்லங்களையும் நம்மால் அமைக்க முடியாது. ஏதாவது ஒரு ரீதியில் ஏதாவது ஒரு வாஸ்து குறை என்பது இருக்கத்தான் செய்யும். அப்படி இருக்கக்கூடிய குறைகளை நீக்கி நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய அதே நேரத்தில் நாம் முயற்சிக்கும் செயல்களில் வெற்றி கிடைக்க எந்த சிலையை எப்படி வைக்க வேண்டும் என்று தான் இந்த வாஸ்து குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, எந்த இடமாக இருந்தாலும் சரி, நான்கு சுவர் எழுப்பி கூரை போட்டு விட்டால் அது வாஸ்து பார்ப்பதற்குரிய இடமாக கருதப்படுகிறது. அவ்வாறு நாம் கட்டிய வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்து அதனால் நமக்கு நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுமாயின் அதை சரி செய்வதற்கு நாம் வாஸ்து ரீதியாக சில பொருட்களையோ அல்லது சிலைகளையோ வாங்கி வைப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது தான் வாஸ்து ஆமை.

- Advertisement -

ஆமை புகுந்த வீடு முன்னுக்கு வராது என்று கூறுவார்கள். இதில் ஆமை என்பது உயிர் வாழக்கூடிய ஆமை கிடையாது. முயலாமை, இயலாமை என்னும் ஆமைகள் நமக்குள்ளும் நம் வீட்டிற்குள்ளும் வந்துவிட்டால் நம்மால் எந்த வகையிலும் முன்னேற்றம் அடைய முடியாது என்பதால்தான் ஆமை புகுந்த வீடு முன்னுக்கு வராது என்று கூறியிருக்கிறார்கள்.

அதிக நாட்கள் உயிர் வாழக்கூடிய உயிரினமாக கருதப்படுவது தான் ஆமை. பெருமாளே ஆமை அவதாரம் எடுத்து திருப்பாற்கடலை கடைவதற்கு உதவி புரிந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஆமையில் நமக்கு அதிகமான நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும் என்று வாஸ்து ரீதியாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த ஆமையை நாம் வீட்டில் வாங்கி வைத்தோம் என்றால் நம் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து, அதனால் நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைந்து நமக்கு அதிர்ஷ்டம் பெருகும்.

- Advertisement -

இந்த ஆமையை சரியான முறையில் நாம் நம் இல்லத்தில் வைக்க வேண்டும். இதற்கு அந்த ஆமை அளவிற்கு ஒரு தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தட்டில் நீரை ஊற்றி அந்த நீரில் ஆமை இருப்பது போல் வைக்க வேண்டும். மேலும் அந்த ஆமையின் மேல் நாம் ஏதாவது ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். சில ஆமைகளின் வாய் திறந்தபடி இருக்கும் பட்சத்தில் அதன் வாயிலும் நாணயத்தை வைக்கலாம். எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் வைக்கலாம். ஏனென்றால் இந்த ஆமைக்கு நாளா பக்கமும் அதாவது 360 டிகிரியும் நேர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்தும் தன்மை இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: இரவு நேரத்தில் தூங்கும் பொழுது தலையணைக்கு அருகில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து கொண்டு அறியாமல் கூட தூங்காதீர்கள்! பெரிய பிரச்சனை வரும்.

இவ்வாறு வைப்பதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாஸ்து ரீதியாக இருந்த கோளாறுகள் அனைத்தும் நீங்கி, செல்வ செழிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -