இரவு நேரத்தில் தூங்கும் பொழுது தலையணைக்கு அருகில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து கொண்டு அறியாமல் கூட தூங்காதீர்கள்! பெரிய பிரச்சனை வரும்.

water-vasthu-vastu
- Advertisement -

இரவில் தூங்கும் பொழுது பலரும் பல பொருட்களை தங்களது தேவைக்கு ஏற்ப தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்குவோம். அப்படி வைத்துக் கொள்ளும் பொருட்களுக்கும், நாம் உறக்கத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இரவில் தலையணைக்கு அருகில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டு தூங்கினால் மன அளவில் உளைச்சல் ஏற்படும், தூக்கம் வராது என்று கூறப்படுகிறது. அப்படியான ஒரு பொருள் என்ன? அதை ஏன் தலையணைக்கு அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது? என்பதைத்தான் இந்த வாஸ்து சாஸ்திர தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஜோதிடத்திற்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. ஜோதிட ரீதியாக சில காரகத்துவங்கள் பெற்ற கிரகங்கள் நம் வாழ்க்கையை ஆட்டி படைத்து கொண்டு இருக்கும். அதன்படி சில பொருட்களை கையாண்டால் நமக்கு நன்மைகள் நடக்கும், தவறினால் அதற்கேற்ற விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும்.

- Advertisement -

இரவில் அதிகம் தண்ணீர் குடிக்கக் கூடியவர்கள் பலரும் தங்களுடைய தலையணைக்கு அருகிலேயே தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு தூங்குவார்கள். ஜோதிட ரீதியாக இரவை ஆட்சி செய்யும் சந்திரன், தண்ணீருக்கு காரகத்துவம் பெற்றவர். அதேபோல மனதிற்கும் அவர் தான் காரகத்துவம் பெற்றவர் எனவே தலையணைக்கு அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு தூங்கினால் தூக்கம் வருவதில் காலதாமதம் ஏற்படும், பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

முந்தைய காலங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து வைத்துக்கொண்டு இரவில் தூங்குவது கிடையாது. செம்பில் தான் தண்ணீரை வைத்துக் கொண்டு தூங்குவோம். இப்படி பயன்படுத்தப்படும் செம்பு பல உலோகங்களால் ஆனதாக இருக்கும். இரும்பு, பித்தளை, காப்பர், வெள்ளி, சில்வர் என்று ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்களும் கூறப்பட்டுள்ளது. அதில் சனி பகவான் காரகத்துவம் பெற்றுள்ள இரும்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தூங்க கூடாது என்று கூறுவார்கள்.

- Advertisement -

அதே போல பித்தளை, காப்பர், வெள்ளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் வைத்து தூங்குவது நற்பலன்களை கொடுக்கும் என்றும் கூறுவார்கள். ஆனால் அவற்றை தலையணைக்கு மிக அருகில் வைத்துக் கொண்டு தூங்க மாட்டார்கள். சற்று இடைவெளி விட்டு கைக்கு எட்டும் தூரத்தில் தான் செம்பில் தண்ணீரை வைத்திருப்பார்கள். இரவு தூங்கும் பொழுது பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் அடைத்து வைத்துக்கொண்டு தூங்குவதை விட இது போன்று செம்பில் தண்ணீர் வைத்து தூங்குவது ரொம்பவே நல்லது. அதுவும் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்க வேண்டும். தலையணைக்கு மிக அருகில் தண்ணீர் இருக்கக் கூடாது. இதனால் மன அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டில் மாமரம் இப்படி இருந்தால் கஷ்டம் தான் வரும் தெரியுமா? மாமரம் வீட்டில் இருக்கக் கூடாத இடம் என்ன?

அது மட்டுமல்லாமல் இரவு தூங்கும் பொழுது தலையணைக்கு அருகில் மின்சாதன பொருட்கள் எதுவும் இருக்கக் கூடாது. இப்போது பலரும் மொபைல் போனை தலைக்கு பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தூங்குகின்றனர். இதிலிருந்து வரக்கூடிய அலைகள் நம்முடைய மூளையை பாதிக்க செய்யும். இதனால் மனமும் பாதிப்படையும். மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் போன்ற நவீன சாதனங்கள் எதுவும் தலையணைக்கு அருகில் வைத்துக் கொள்ளாமல் தூங்கி பாருங்கள். உறக்கம் நிம்மதியாக வரும், மனமும் சுத்தமாக இருக்கும்.

- Advertisement -