அதிர்ஷ்டம் தரும் பொருட்களில் இதுவும் ஒன்று! இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம் தெரியுமா?

vasthu-aamai-cash
- Advertisement -

வாஸ்து ரீதியாக சில பொருட்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. ஆனால் ஆன்மீக ரீதியாக இந்த ஒரு விஷயத்தை துரதிஷ்டத்திற்கு அடையாளமாக கூறப்படுவதும் உண்டு. துரதிஷ்டம் என்று நினைத்தது சரியா? அல்லது இது நிஜமாகவே அதிர்ஷ்டம் தருமா? நம் வீட்டிலும் அதிர்ஷ்ட யோகங்கள் வர நாம் செய்ய வேண்டிய இந்த சின்ன விஷயத்தை தெரிந்து கொள்வோமா? வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டம் தரும் அந்த பொருள் என்ன? என்கிற ரகசியத்தை தான் இனி வரும் பத்திகளில் காண இருக்கிறோம்.

வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்கள் சரியான திசையிலும், சரியான அறையிலும் வைக்கப்படுவதால் அந்த இல்லத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று தீர்கமாக நம்பப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் வறுமை நீங்கி, துரதிர்ஷ்டங்கள் எல்லாம் மறைந்து, அதிர்ஷ்டங்கள் வரும் என்பது பெரும்பாலானோர் நம்பிக்கை ஆகும். இது நமக்கும் எந்த அளவிற்கு செயல்படும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

அதிர்ஷ்ட பொருட்களில் ஒன்று ‘ஆமை சிலை’ ஆகும். பொதுவாக ஆன்மீகத்தில் ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று பழமொழி கூறப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆமை வாஸ்து சாஸ்திரத்தில் அதிர்ஷ்ட மழை பொழிய செய்யும் ஒரு அற்புத பொருளாக குறிப்பிட்டுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் உருப்படாது, செயல்படாது என்று கூறுவது முறையானது அல்ல! பல தமிழ் பழமொழிகள் அர்த்தம் புரியாமல் திரித்து கூறுவது உண்டு. இது அடுத்தடுத்த காலகட்டங்களில் வேறு விதமாக காண்பிக்கப்படுவதும் உண்டு.

அந்த வகையில் ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பதற்கு உண்மையான அர்த்தம் வேறு ஆகும். வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு செல்லப்பிராணி தான் இந்த ஆமை, மெதுவாக நகரக்கூடிய தன்மை கொண்டது. இது நகர்ந்து வீட்டில் வருவது கூட தெரியாமல் இருந்தால், அன்னியர்கள் யாராவது வந்தால் எப்படி அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும்? அந்த அளவிற்கு சோம்பேறித் தனத்துடன் இருக்கும் வீடு எப்படி உருபடும்? என்பதை உணர்த்தவே இந்த பழமொழி கூறப்பட்டது. நம் முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் கூறுவதில்லை.

- Advertisement -

ஆமை இருக்கும் இல்லம் நிச்சயம் உருபடும். ஒரு ஆமை படம் அல்லது சிலை அதிர்ஷ்ட குறியீடாக கருதப்படுகிறது. இது படமாகவோ அல்லது சிலையாகவோ நீங்கள் உங்களுடைய மீன் தொட்டி அல்லது வரவேற்பறையில் அனைவரின் பார்வையும் படும்படி வைத்தால் அங்கு அதிர்ஷ்டம் நிறையுமாம். உலோகம், ஸ்படிகம், மரம், கல் போன்றவற்றால் உருவாகக்கூடிய ஆமை ரொம்பவும் விசேஷமானது. இந்த வகையில் ஆமையை வாங்கி வடமேற்கு திசை அல்லது தென்மேற்கு திசை, தென்கிழக்கு திசை போன்றவற்றில் வைத்தால் யோகங்களுக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிக்கலாமே:
இந்த 1 பொருள் உங்க வீட்டில் இருந்தால் அமைதியும், செல்வமும் செழிக்கும் தெரியுமா? வியக்க வைக்கும் வாஸ்து சாஸ்திரம்!

கிழக்கு திசை என்பது இதனுடைய விசேஷமான திசையாகும். கிழக்கில் ஆமை சிலை வைத்தால் அங்கு பண வரவிற்கு பஞ்சமே இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த அளவிற்கு அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் கொடுக்கக் கூடிய ஆமையை இத்தனை நாள் புறக்கணித்து விட்டோமே என்று தோன்றுகிறது அல்லவா? ஆமை சிலை உண்மையில் வாஸ்து ரீதியாக நற்பலன்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. எனவே ஏதாவது ஒரு உலோகத்தால் ஆன ஆமையை நீங்களும் உங்கள் வீட்டில் வைத்து பாருங்கள், அதிர்ஷ்ட யோகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -