இந்த 1 பொருள் உங்க வீட்டில் இருந்தால் அமைதியும், செல்வமும் செழிக்கும் தெரியுமா? வியக்க வைக்கும் வாஸ்து சாஸ்திரம்!

fountain-murugan-vastu
- Advertisement -

வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை சில இடங்களில் வைக்கும் பொழுது அதிலிருந்து உருவாகக்கூடிய அதிர்வலைகள் நமக்கு நடக்கும் விஷயங்களை பாசிட்டிவாக மாற்றி காண்பிக்கும் என்று கூறுகிறது. வாஸ்து ரீதியாக மட்டுமல்லாமல், இயற்கையாகவும் இப்பொருட்கள் நமக்கு நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கிறது. அந்த வகையில் இந்த ஒரு பொருளும் நமக்கு அதிர்ஷ்டத்தையும், அமைதியையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய வீடுகளிலும், பணக்கார இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த ஒரு பொருள் உங்களிடமும் இருக்கிறதா? இதை வைத்தால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும்? என்பதை தான் வாஸ்து ரீதியாக இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக எந்த ஒரு கோவிலும் நீர் நிலைகளில் கட்டப்பட்டு இருந்தால் அதற்கு தனி சிறப்புகள் உண்டு. நீரூற்றுகள், ஆறு, குளம், ஏரி, கடல் போன்றவற்றுக்கு அருகில் இருக்கும் கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இன்றும் காணப்படுகிறது. அதற்கு காரணம் பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருக்கும் நீர் ஸ்தலமாக அமைக்கப்பட்டு இருப்பதால் பேராற்றலை கொண்டிருக்கும். இக்கோவில்களுக்கு சென்று வந்தாலே நமக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும்.

- Advertisement -

அதுபோல வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய இந்த ஒரு பொருளும் பாசிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்துகிறது. பெரிய பெரிய ஹோட்டல்கள் அல்லது மாளிகைகளில் நீரூற்றுகள் வைக்கப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். இந்த நீரூற்றுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வமும், நேர்மறை ஓட்டமும் காணப்படும். இங்கு தன வரவிற்கு பஞ்சமே இருக்காது.

இந்த நீர் ஊற்றுகள் கொடுக்கும் சத்தம், தண்ணீர் பாயும் இந்த ஓசை மனதை செம்மைப்படுத்தும். வீட்டில் இதை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் சண்டை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயம் சண்டை போட வேண்டும் என்கிற எண்ணத்தையே இது முற்றிலுமாக மாற்றி விடுமாம். அமைதியாக கண்களை மூடி இதன் ஓசையை கேட்கும் பொழுது நமக்குள் இருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் மறையும். இதனால் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற தெளிவான முடிவை எடுப்போம்.

- Advertisement -

இந்த செயற்கை நீரூற்றுகள் மலிவான விலைகளிலும் இப்போது பல இடங்களில் காணப்படுகிறது. இதை வீட்டில் வாங்கி வைப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் வாஸ்து ரீதியான காரணங்கள் தான் அதில் அதிகம் உண்டு. நீரூற்றுகளை வடக்கு திசையில் அல்லது வடகிழக்கு மற்றும் கிழக்கு போன்ற திசைகளில் அமைக்கப்பட வேண்டும். இது வாஸ்து ரீதியாக யோகத்தை கொடுக்கும், வாஸ்து தோஷங்களையும் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. பஞ்ச பூதத்தில் ஒன்றாக விளங்கும் இந்த நீர் ஊற்றுகள் தோட்டங்களில் வைக்கப்படுவதும் உண்டு. பளிங்கு, வெள்ளை நிற நீர் ஊற்றுகள் சிறந்தவையாக கருதப்படுகிறது. தென்கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் நீரூற்றுகள் வைக்கக்கூடாது. மேலும் வாசலுக்கு நேரே நீரூற்றுகள் அமைக்கப்படலாம். இது எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும்.

விதவிதமான நீரூற்றுகளில் ஒலி, ஒளி அமைப்பை நீங்கள் ஏற்படுத்துவது ரொம்பவே நல்ல ஆற்றல்களை கொடுக்கக் கூடியது ஆகும். இது செல்வ செழிப்பையும், பணவரவையும் தடை இல்லாமல் உங்களுக்கு கொடுக்கும். மெல்லிய இசை, மெல்லிய ஒளி உள்ள விளக்குகள் அமைக்கப்படுவது மிகுந்த நன்மைகளை தரக்கூடியது மேலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய நீரூற்றுகளும் நன்மை பயக்கும். பார்க்கும் பொழுதே கண்களுக்கும், மனதுக்கும் இனிய இதமான உணர்வுகளை கொடுக்கக்கூடிய இந்த நீரூற்றுகள் வாஸ்து சாஸ்திரத்தில் மட்டும் அல்லாமல் இயற்கையாகவும் நம் மனதை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு வாங்க எளிய வாஸ்து பரிகாரம்

இந்த நீர் ஊற்றுகளை படுக்கை அறையில் கட்டாயம் வைக்க கூடாது. இது உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்தும். வராண்டா, தோட்டம், வரவேற்பறை, உணவு அருந்தும் இடம் ஆகிய இடங்களில் நீங்கள் அமைக்கலாம். சமையலறையில் கூட நீரூற்றுகளை தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். இதில் கூழாங்கற்கள், பாறைகள், பாசிகள், பச்சை செடி கொடிகள், சிலைகள் என்று நீங்கள் அலங்கரித்து வைத்தால் இன்னும் நீங்கள் வியக்கும் வண்ணம் பலன்களை பெறலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்!

- Advertisement -