அதிர்ஷ்டம் தேடி வர பரிகாரம்

lakshmi lotus
- Advertisement -

ஒருவருக்கு எதிர்பாராத வகைகள் நன்மைகள் நடைபெறுகிறது என்றால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறுவோம். இந்த அதிர்ஷ்டம் சாதாரணமாக யாரிடத்திலும் வராது. அதற்கு என்று சில யோக அமைப்புகள் ஜாதகரீதியாக இருக்க வேண்டும். அப்படி பட்டவர்கள் மட்டும்தான் அதிர்ஷ்டசாலியாக திகழ்வார்களா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று கூறலாம். சில பரிகாரங்களை நாம் செய்வதன் மூலமும் அந்த அதிர்ஷ்டத்தை நம்மால் பெற முடியும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அதிர்ஷ்டம் என்பது நாம் நினைக்கும் செயலை நினைத்தபடியே செய்து முடிக்க உதவும். உதாரணமாக ஒரு வேலையை தேடுகிறோம் என்னும் பட்சத்தில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் எதிர்பாராத நல்ல வேலையாக நமக்கு கிடைக்கும். திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வசதி மிகுந்த திருமண வரனாக கிடைக்கும். இப்படி நாம் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து இருந்தோம் என்றால் அந்த விஷயமே பல மடங்கு சிறப்பு மிகுந்த விஷயமாக நம்மை தேடி வரும். இதை தான் நாம் அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம். இந்த அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு முன்பாக நம்மிடம் இருக்கக்கூடிய துரதஷ்டத்தை நாம் நீக்க வேண்டும். அப்படி நாம் நீக்கினால் தான் நமக்கு வர வேண்டிய அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும்.

- Advertisement -

இந்த துரதிஷ்டத்தை நீக்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியில் ஒரு முட்டையை வைத்து நம்முடைய தலையை மூன்று முறை வலப்புறமாகவும் இடப்புறமாகவும் சுற்றி அந்த முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வரவேண்டும். இது திருஷ்டி நீக்குவது தான் என்றாலும் இந்த முறையில் இந்த நேரத்தில் நாம் திருஷ்டி கழிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளும் துரதிஷ்டமும் நீங்கிவிடும்.

அடுத்ததாக வியாழக்கிழமை அன்று குரு பகவானை மனதார வேண்டிக்கொண்டு இரண்டு தாமரை மலர்களை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். வீட்டில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து வைத்து அதில் இந்த இரண்டு தாமரை மலர்களையும் போட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் சுக்கிர ஹோரையில் இந்த இரண்டு தாமரை மலர்களையும் எடுத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

- Advertisement -

சுத்தமாக குளித்து முடித்த பிறகு வீட்டு பூஜை அறைக்கு வந்து ஒரு தாமரை பூவை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு சமர்ப்பித்து விட்டு மற்றொரு தாமரை பூவை உதிர்த்து மகாலட்சுமியின் அஷ்டோத்திரத்தை கூறியவாறு மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு வாரங்கள் தாமரைப் பூவை வைத்து பரிகாரம் செய்ய நம்மை தேடி அதிர்ஷ்டம் வரும்.

தாமரை மலர்கள் கிடைக்கவில்லை என்பவர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைகளில் தாமரை விதைகளை தூவி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த தாமரை விதைகள் செடிகளாக மாறி தாமரைப்பூ பூக்க ஆரம்பிக்கும். இந்த தாமரை பூக்களை பலரும் பறித்து மகாலட்சுமி தாயாருக்கு வைத்து வழிபட அதனால் நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: முப்பெரும் தேவியரின் அருளைப் பெற பஞ்சமி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வராத அதிர்ஷ்டத்தை வரவைத்துக் கொள்வோம்.

- Advertisement -