குழந்தைகளின் கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் என சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்க நாளை (30.8.23) பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் ஆவணி அவிட்டத்தில் இந்த பொருளை மறக்காமல் வாங்கி அதில் தீபம் ஏற்றி விடுங்கள்.

children dheepam
- Advertisement -

பௌர்ணமி என்றாலே அது வழிபாட்டிற்குரிய நாள் தான். இதில்அம்பிகை, சந்திரன் மட்டும் அல்லாது சகல தெய்வங்களையும் இந்த நாளில் வழிபடும் பொழுது மற்ற நாட்களில் நாம் வணங்குவதை காட்டிலும் கூடுதலான பலன்களை பெறலாம். சந்திரன் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அதை பொறுத்து அந்தந்த மாதத்தில் வரும் பௌர்ணமி ஆனது விசேஷமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு வரும் பௌர்ணமி நாள் மிகவும் விசேஷம். இந்த அற்புதமான நாளில் நாம் வாங்கும் ஒரு பொருளால் நம் வீடு முழுவதும் செல்வம் நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது அதை குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி அவிட்டத்தில் செய்ய வேண்டியது
இன்றைய தினத்தில் பூணூல் மாற்றுவது ஒரு முக்கியமான வழிபாடாக செய்து வருகிறார்கள். அத்துடன் இன்றைய தினத்தில் உமா மகேஸ்வர பூஜை செய்வது மிகவும் சிறந்ததாக சொல்லப்படுகிறது. அதே போல் குழந்தைகளின் கல்வி ஞானம் சிறந்து விளங்க லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு செய்பவர்கள் தாராளமாக இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இது அவர்களுக்கு பல மடங்கு கல்வி ஞானத்தை தரும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த நாளில் நாம் ஏதேனும் ஒரு பொருளை வாங்க வேண்டும் எனில் அது நெல் மணிகள் தான். இந்த நெல்மணிகளானது தானியங்களிலே தங்கத்திற்கு நிகராக பார்க்கப்படுகிறது. அப்படியான இந்த நெல்மணிகளை இன்று ஒரு கைப்பிடி அளவு வேணும் வாங்குவது வீட்டில் நீங்கள் பெருமளவு தங்கத்தை வாங்குவதற்கு சமம். இந்த நாள் புதன் அன்று வந்திருப்பதால் குழந்தைகளின் படிப்பு தொடர்பான எந்த பொருள்களை வாங்கினாலும் மிகவும் நல்லது. அதே போல் வஸ்திரம் வாங்குவதும் சிறந்ததாக சொல்லப்படுகிறது. இன்று வாய்ப்பு இருப்பவர்கள் தங்கம் வாங்கலாம். பொதுவாகவே புதன்கிழமை தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் தான்.

இன்றைய தினத்தில் வீட்டில் மகாலட்சுமி தாயாரை நினைத்து பூஜை செய்வது நம் வீட்டில் செல்வ நலன்களை பல மடங்கு உயர்த்தி கொடுக்கும். இந்த நாளில் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன விக்ரகங்களில் ஏதேனும் ஒன்றை நாம் வழிபாட்டிற்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அது லட்சுமி, அன்னபூரணி தாயார் இப்படியான தெய்வங்களாக இருப்பது நல்லது. நீங்கள் வாங்கி இருக்கும் நெல்மணிகளை ஒரு தட்டில் பரப்பி அதன் மேல் இந்த விக்கிரகங்களை வைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர் சூட்டி உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை செய்து வைத்து வழிபடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் தீபம். இந்த தீபத்தையும் நீங்கள் வாங்கும் நெல்மணிகளை கொண்டு தான் ஏற்ற வேண்டும். இதே போல் ஒரு தட்டில் நெல்மணிகளை பரப்பிய பிறகு அதன் மேல் இரண்டு அகல் விளக்கை வைத்து பஞ்சு திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுங்கள். இந்த தீபமும் வீட்டில் வற்றாத செல்வத்தையும் வறுமை இல்லா நிலையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். அதே போல் குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை காண வழிபாட்டுடன் இன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவு 11 குழந்தைகளுக்கு பெண் நோட்டு போன்ற படிப்பு தொடர்பான எந்த பொருட்களையாவது வாங்கி கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் சம்பாதிக்கும் தொகையில் ஒரு பங்கை இந்த இருவருக்கு தருவதன் மூலம் செல்வம் அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல் என்றுமே நிலைத்து இருக்கும்.

நம் வீட்டில் ஐஸ்வர்யங்கள் பெருகவும், வறுமை நீங்கவும், செல்வம் கொழிக்கவும், குழந்தைகளின் கல்விகள் சிறந்து விளங்கவும் என அனைத்திற்கும் ஆன வழிபாட்டிற்குரிய சிறந்த இந்த நாளை தவறாமல் உங்களால் முடிந்த இந்த வழிபாடுகளில் ஏதேனும் ஒன்று செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -