அட்சய பாத்திரமே உங்கள் கையில் வந்ததை போல அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற, அங்காரக சங்கடஹர சதுர்த்தியான இன்று மாலை விநாயகருக்கு செம்பருத்தி இலையை வைத்து இப்படி செய்தால் போதும்.

vinayagar sembaruthi
selvam peruga
- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி என்றாலே நமக்கு விநாயகர் ஞாபகத்திற்கு வந்து விடுவார். ஏனென்றால் அவருகான ஒரு விசேஷ வழிபாட்டிற்குரிய நாள் என்றால் அது இந்த சங்கடஹர சதுர்த்தி தான். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும் விசேஷம். செவ்வாய்க்கிழமையானது அங்கார காரனுக்கு உரியது . நம்முடைய வாழ்க்கையில் கடன் இல்லாமல் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ அங்காரகாரகனின் அனுகிரகம் தேவை. அப்பேர்ப்பட்ட இந்த நாளில் சதுர்த்தியும் வந்திருப்பது நம்முடைய கடன் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள ஒரு அற்புதமான நாள் என்றே சொல்லலாம். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை குறித்து ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கடன் தீர்ந்து செல்வ வாழ்க்கை வாழ செம்பருத்தி இலை பரிகாரம்
இன்று சதுர்த்தி ஆனது மதியம் 1 மணிக்கு மேல் துவங்குகிறது. ஆகையால் மாலையில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறந்தது. இந்த வழிபாட்டை ஆலயம் சென்று செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டில் இருந்த படியே விநாயகர் படத்தை வைத்து மிகவும் எளிமையான முறையில் வழிபடலாம். இன்றைய நாளில் செய்யும் போது இதற்கான பலன் பல மடங்கு உண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு செம்பருத்தி இலை தேவை. இதற்கு ஒற்றைச் செம்பருத்தி இலை தான் பயன்படுத்த வேண்டும். அது தான் நல்ல பலன்களை கொடுக்கும். இந்த செம்பருத்தி இலைகளை 11,21, 54 108 என்ற இந்த எண்ணிக்கையில் உங்களால் எது முடியுமோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாட்டு மருந்து கடைகளில் அஷ்ட கந்த சூரணம் கிடைக்கும். அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை இது கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் மட்டும் சுத்தமான சந்தனத்தில் கொஞ்சம் பன்னீர் ஊற்றி குழைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் படம் அல்லது விக்ரகம் எதுவாக இருப்பினும் அதை எடுத்து வைத்து அவற்றிற்கு மாலை போட்டு வெற்றிலை பாக்கு பூ பழம் என அனைத்தும் வைத்த பிறகு ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். நெய்வேத்தியமாக ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை மட்டும் வைத்து விடுங்கள் போதும். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் செம்பருத்தி இலையை சுத்தமாக துடைத்து விட்டு செம்பருத்தி இலையின் காம்பை எடுத்து அஷ்டகந்த சூரணத்தில் தொட்டு செம்பருத்தி இலையில் ஓம் என்று எழுத வேண்டும். இதை எழுதும் போது ஓம் என்ற இந்த பிரணவ மந்திரத்தை நீங்கள் உச்சரித்துக் கொண்டே எழுத வேண்டும். 11 இல்லை என்றால் பதினொரு முறை 21 இருந்தால் 21 முடிந்தவரையில் 108 எழுதுவது மிக மிக நல்லது.

- Advertisement -

இப்போது நீங்கள் எழுதி வைத்த செம்பருத்தி இலைகளை எல்லாம் மாலை போல தொடுத்து விநாயகர் படத்திற்கு போட்டு விடுங்கள். இந்த மாலையை தொடுக்கும் பொழுது உங்களுடைய எந்த வேண்டுதலுக்காக இந்த வழிபாட்டை செய்கிறீர்களோ அதை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை குறைந்தது ஒன்பது வாரங்களாவது தொடர்ந்து செய்ய வேண்டும். ஒன்பது வாரங்கள் முடிவதற்குள்ளாகவே உங்களுடைய கடன் பிரச்சனை எதுவாக இருப்பினும் அதை தீர்க்கக்கூடிய வாய்ப்பினை விநாயகர் நிச்சயமாக தருவார்.

இதையும் படிக்கலாமே: கையில் இருக்கும் பணத்தையும், நகையையும் பிறரிடம் கொடுத்துவிட்டு திரும்ப கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், விரைவிலேயே கொடுத்த பணமும், நகையும் திரும்ப கிடைத்துவிடும்.

இதன் பிறகும் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வரும் போது உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதோடு அனைத்து செல்வ நலன்களையும் பெற்று வளமாக விநாயகர் வாழவைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்

- Advertisement -