அவசர தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்க இதை ஒரு முறை எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் கைக்கு பணம் வரும்.

cash-mahalakshmi
- Advertisement -

அவசரத் தேவைக்கு பணம் கிடைக்காமல் கடைசி நேரத்தில் உடைந்து போய் உட்காருபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். உயிர் போகும் நேரத்தில், கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கை நழுவிப் போகும் சமயத்தில், கடன் வாங்குவதில் எந்த தவறும் கிடையாது. வாங்கிய கடனை நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்து திருப்பி அடைத்துக் கொள்ளலாம். அவசர தேவைக்கு பணம் தேவை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு பணத்தை சேமிக்க வேண்டும் வருமானம் அதிகரிக்க வேண்டும் தொழில் விருத்தி அடைய வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு பிரியாணி இலை தேவைப்படும். கிழிசல் இல்லாத பிரியாணி இலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற பேனா வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அந்த பேனா, அந்த பிரியாணி இலையில் எழுதும் படி இருக்க வேண்டும். முடிந்தால் சிவப்பு வண்ண ஸ்கெட்ச் கூட வாங்கி எழுதுவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை வேறு எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுக்கு நிலைமை சரியில்லை. உடனடியாக பணம் தேவை என்றாலும் இதை வேறு எந்த கிழமையில் செய்வதிலும் தவறு ஒன்றும் கிடையாது.

பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரியாணி இலையை எடுத்து முதலில் அந்த பிரியாணி இலையில் 2 0 7 1 0 1 8 7 இந்த எண்ணை எழுதி விடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அந்த குறிப்பிட்ட தொகையை எழுதி எனக்கு அந்த பணம் கூடிய விரைவில் கிடைக்க வேண்டும் என்று எழுதவேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு ‘50,000 ரூபாய் பணம் அவசரமாக தேவை’ என்று எழுதி ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் இந்த இலையை போட்டு விட்டு ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம், 1 ரூபாய் நாணயத்தையும் அந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி அலமாரியில் ஒரு ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பணம் உங்கள் கைக்கு வருவதற்கு என்னென்ன முயற்சிகள் தேவையோ அதை நீங்கள்தான் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியை தூண்டி விடுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு துணையாக நிற்கும்.

வீட்டில் ஊறுகாய் பாட்டில் காபித்தூள் பாடல் இருக்கும் அல்லவா அதை சுத்தமாக கழுவி விட்டு காய வைத்து விட்டு இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குறிக்கோள் நிறைவேறும் வரை இந்த பாட்டில் அப்படியே உங்கள் வீட்டில் இருக்கட்டும். பணம் கைக்கு வந்த பிறகு உள்ளே இருக்கக்கூடிய பிரியாணி இலையை நெருப்பில் கொளுத்தி அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். இதேபோல தொழில் நன்றாக நடக்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். என்ற மற்ற விஷயங்களை கூட மேல் சொன்ன என்னோடு சேர்த்து எழுதினால் அதுவும் பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையை ஆதாரமாக வைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -