முகப்பருக்கள், கருந்திட்டுக்கள் வராமல் உங்க ஸ்கின் பேபி சாஃப்டாக இருக்க இந்த தண்ணிய பயன்படுத்தலாமே!

hot-water-skin-soft
- Advertisement -

நம் முகத்தில் எப்பொழுதும் கருத்திட்டுகள், முகப்பருக்கள் தோன்றாமல் பொலிவுடன் இருக்க ரொம்ப எளிதாக வீட்டிலேயே சில பொருட்களை வைத்து பராமரித்துக் கொள்ளலாம். முகத்தை உள்ளிருந்தே சுத்தம் செய்து, தூய்மையாக்கி முகப்பருக்களை அண்ட விடாமல் தடுக்கக்கூடிய இந்த தண்ணீர் என்ன தண்ணீர்? இதை எப்படி தயாரிக்க வேண்டும்? இதன் பலன்கள் என்னென்ன? என்பது போன்ற அழகு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

பேபி சாஃப்ட் ஸ்கின் என்பது எல்லோருக்கும் இருப்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே தாண்டியவுடன் எல்லோருக்கும் முகப்பருக்கள், கருந்திட்டுகள், கரும்புள்ளி, வெண்புள்ளி என்று முக அழகு சீர்கெடுப்பதற்கு பல்வேறு விஷயங்கள் படையெடுத்து வருகின்றன. இதிலிருந்து நம்மை எளிதாக பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான தண்ணீர் தான் இது! முதலில் ஒரு பாத்திரத்தில் நிரம்ப தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு கைப்பிடி அளவிற்கு சுத்தமான வேப்பிலையை கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கொதித்து வந்தவுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு துளசி இலைகளை சேருங்கள். பிறகு சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் ஒரு கைப்பிடி அளவிற்கு ரோஜா இதழ்களை சேருங்கள். பன்னீர் ரோஜாவாக இருந்தால் நல்லது. பின் அடுத்த ரெண்டு நிமிடம் கொதிக்க விட்டு ஒரு ஸ்பூன் பாதம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு நிமிடம் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் நீங்கள் சளி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகளுக்கு எப்படி ஆவி பிடிப்பீர்களோ, அதே போல இந்த தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். ஒரு கனமான பெட்ஷீட் ஒன்றை எடுத்து காற்று புகாதபடி போர்த்திக் கொள்ளுங்கள். அதனுள் இந்த தண்ணீரை முழுவதுமாக முகத்தில் ஆவி பிடிக்க செய்யுங்கள். இதனால் சரும துவாரங்கள் திறந்து முகத்திற்குள் இதனுடைய சாராம்சங்கள் சென்று முகப்பருக்களை தோற்றுவிக்கும் கிருமிகளை அழிக்கிறது. அது மட்டும் அல்லாமல் கரும்புள்ளி, வெண்புள்ளி, கருந்திட்டுகள் போன்ற தொந்தரவுகளில் இருந்தும் முழுமையாக நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.

- Advertisement -

சூரிய ஒளி கதிர்களால் ஏற்படக்கூடிய கருமையை கூட இது நீக்க வல்லது. ரொம்பவே எளிதாக வீட்டிலேயே தயாரித்து பத்து நிமிடத்தில் செய்து விடக் கூடிய இந்த ஒரு மூலிகை தண்ணீரில் ஆவி பிடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் நமக்கு நடைபெறும். சளி, கபம் போன்ற பிரச்சனைகளும் இதனால் தோன்றாமல் இருக்கும். மேலும் முகம் மாசு, மருவில்லாமல் பளிங்கு போலவும் ஜொலிக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஆலுவேரா ஜெல்லுடன் இந்த ஒரு பொடியை சேர்த்து பேக் போட்டு பாருங்கள். உங்க முகம் பளிங்கு போல மாறி பார்ப்பவரை சொக்க வைக்கும் பேரழகை பெறலாம்.

இந்த தண்ணீரை நன்கு ஆற வைத்த பின்பு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். பத்து நாட்கள் வரை கெட்டுப் போகாது. நீங்கள் தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல இதனை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் உங்கள் முகத்தில் ஸ்பிரே செய்து 10 நிமிடம் உலர விட்டு, பின்பு ஈரத்துணையால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் முகத்தில் எப்பொழுதுமே அழுக்குகள் சேராமல் முகம் குழந்தையின் சருமம் போல பேபி சாப்ட்டு ஸ்கின் ஆக இருக்கும்.

- Advertisement -