பட்டுப்போல பளபளக்கும் சருமத்தை பெற ஒரே ஒரு பாதாம் போதும். இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய கண்ணம் பால் நிலா போல ஜொலிக்க ஆரம்பிக்கும்.

face2
- Advertisement -

அழகான ஜொலி ஜொலிக்கும் கன்னங்கள், மாசு மருவற்ற சருமம், முகத்தை பார்க்கவே அத்தனை அழகு. இப்படி சொல்லும் போதே நமக்கு ஆசை வருகிறது. இதே போல ஒரு மாசு மருஅற்ற அழகான முகம் நமக்கும் கிடைக்காதா. ஏன் கிடைக்காது. நிச்சயம் கிடைக்கும்ங்க. எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களுடைய முகத்தில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் சரி, தொடர்ந்து ஒரு சில நாட்கள் பின் சொல்லக்கூடிய அழகு குறிப்பை பின்பற்றி வாருங்கள். உங்களுடைய முகமும் பால் நிலா போல ஜொலிஜொலிக்கும்.

பால் நிலா போல முகம் ஜொலிக்க பாதாம் அழகு குறிப்பு:
ஒரே ஒரு மஞ்சள் உரசும் கல் உங்களுக்கு தேவைப்படும். ஒரு பாதாம், கொஞ்சமாக காய்ச்சிய பால் அல்லது காய்ச்சாத பால் எதுவாக இருக்கட்டும். அந்த பாதாமை எடுத்து, உரசும் கல்லில் வைத்து விடுங்கள். சொட்டு சொட்டாக கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி பாதாமை கல்லில் உரசி எடுத்தால் பாதாம் பேஸ்ட் நமக்கு கிடைக்கும். இப்படி ஒரு பாதாம் முழுவதையும் உரசி பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ளுங்கள். பாதாமும் பாலும் கலந்த இந்த பேஸ்டை உங்களுடைய முகத்தில் தடவி வர வேண்டும்.

- Advertisement -

தினமும் இதை முகத்தில் தடவலாம் தவறு கிடையாது. பாதாமும் இந்த பாலும் சேர்ந்த பேக்கை முகத்தில் போட்டுவிட்டு 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு பேக் நன்றாக காய்ந்திருக்கும். அதை ஈரம் செய்து கொண்டு லேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவிவிடலாம். சில பேருடைய சருமத்திற்கு பால் செட்டாகாது என்று சொல்லுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இந்த குறிப்பை ரோஸ் வாட்டரை வைத்து ட்ரை பண்ணி பாருங்க. எவ்வளவுதான் முகத்திற்கு மேலே பேக் போட்டு போட்டு அழகை கூட்ட வேண்டும் என்று நினைத்தாலும், இது 30 லிருந்து 35% தான் வேலை செய்யும். மீதி 70 சதவிகிதம் நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் தான் உங்களுடைய அழகு இருக்கிறது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கிண்ணியில் 4 பாதாம், 4 பிஸ்தா, 1 பேரீச்சம் பழம், 1 வால்நட், 1 அத்திப்பழத்தை போட்டு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை ஊறிய பொருட்களை எல்லாம் கடித்து சாப்பிட்டு அந்த தண்ணீரை குடிக்கலாம்.

- Advertisement -

இல்லையென்றால் இதை அப்படியே மிக்ஸி ஜாரில் கொட்டி ஒரு ஓட்டு ஓட்டி ஸ்மூதி ஆக குடிச்சிடுங்க. இந்த பொருட்களோடு சேர்த்து வாரத்தில் இரண்டு நாள் ஒரு நெல்லிக்காய் உணவோடு சேர்க்க வேண்டும். கூடவே கருவேப்பிலை. இது சரும அழகிருக்கும் நன்மையை தரும். கூந்தல் அழகுக்கும் நன்மையை தரும். வாரத்தில் இரண்டு நாள் பத்து கருவாப்பிலை இலைகளை யாவது சாப்பிட வேண்டும். எப்படியாவது சாப்பிடுங்க. கருவாப்பிலை பொடி செய்து சாப்பிடுங்க. அப்படியே பச்சையாக மோரில் போட்டு அடித்து குடிங்க.

இதையும் படிக்கலாமே: கறுத்த தேகம் தக தகன்னு தங்கம் மாறி 10 நிமிடத்தில் ஜொலிக்க உங்க வீட்டில் இந்த 2 பொருள் இருந்தாலே போதுமே!

பிறகு வெள்ளரி விதை, பூசணி விதை, பிளாக் சீட்ஸ் இப்படிப்பட்ட விதைகளை எல்லாம் அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட விதைகளை எல்லாம் அதிகமாக சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. வாரத்தில் 2 நாள் மட்டும் அளவோடு விதைகளை சாப்பிடனும். அழகான சருமத்தையும், ஆரோக்கியமான உடலையும் பெறுவதற்கு மேலே சொன்ன அழகு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -