கறுத்த தேகம் தக தகன்னு தங்கம் மாறி 10 நிமிடத்தில் ஜொலிக்க உங்க வீட்டில் இந்த 2 பொருள் இருந்தாலே போதுமே!

face-rice-flour
- Advertisement -

நம்முடைய சருமம் ரொம்பவே சென்சிடிவ் ஆனது. மெல்லிய துளைகள் வழியே செல்லக் கூடிய நுண்கிருமிகளும், மாசுக்களும் சருமத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இந்த பிரச்சனைகளை பத்தே நிமிடத்தில் சரி செய்து நம்முடைய சருமத்தை எவ்வளவு கருப்பாக இருந்தாலும் தங்கம் மாதிரி மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவதற்கு இந்த 2 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்! அவை என்னென்ன? அதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நாம் சாதாரணமாக வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் பொருட்களிலேயே நம்முடைய சருமத்தை பாதுகாக்க கூடிய தன்மை நிறைந்து இருக்கிறது. அதில் ஒன்று தான் அரிசி மாவு! அரிசி மாவு கொண்டு சரும பிரச்சனைகள் பலவற்றையும் நாம் விரட்டி அடித்து விடலாம். அதே போல மூலிகை பொருளாக இருக்கக்கூடிய இந்த ஒரு செடி சரும பிரச்சனைகளில் 90 சதவீதத்தை குணப்படுத்தி காட்டக்கூடிய அற்புதமான பேராற்றல் கொண்டது ஆகும். அந்த ஒரு மூலிகை பொருள் கற்றாழை என்பதாகும்.

- Advertisement -

கற்றாழையில் சருமத்தை ரிப்பேர் செய்து உடனடியாகவே நமக்கு ஜொலிப்பான தோற்றத்தை கொடுக்க கூடிய அத்தனை சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த கற்றாழை உடலுக்கு உள்ளே மட்டும் அல்லாமல் சருமத்திற்கு வெளியேவும் செயல் புரிந்து உடனடி ரிசல்ட்டை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. தினமும் தூங்க செல்லும் பொழுது கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசி உலர விட்டு மறுநாள் காலையில் கழுவி வர முகம் எப்பொழுது மாசு, மரு இல்லாமல் இருக்கும்.

இந்தக் கற்றாழை ஜெல்லுடன் அரிசி மாவு சேரும் பொழுது என்னென்ன மாற்றங்கள் நம் முகத்தில் நிகழ்கின்றன? என்பதை தெரிந்து கொள்வோம். அரிசி மாவு முகத்தை ஸ்கிரப் செய்கிறது. கொஞ்சம் தோலுடன் கூடிய கற்றாழை ஜெல்லை வெட்டி எடுத்து அதனுடன் கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து முகம் மற்றும் எந்தெந்த இடங்களில் உங்களுக்கு கருமை அதிகமாக படர்ந்து இருக்கிறதோ அங்கே எல்லாம் நீங்கள் ஸ்கிரப் செய்ய வேண்டும்.

- Advertisement -

அக்குள் பகுதிகளில் இருக்கக் கூடிய கருமையை கூட இது அழகாக விரட்டி அடிக்கும். சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை கூட இது எளிதாக விரட்டி அடிக்கும். சிலருக்கு பாதி கை வெள்ளையாகவும், மீதி கை கருப்பாகவும் இருக்கும். வெயில் படும் இடங்களில் எல்லாம் இது போல கருமை படர்ந்து இருக்கும். இத்தகைய கருமையை ரொம்ப எளிதாக விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

இதையும் படிக்கலாமே:
24 மணி நேரமும் உங்களுடைய முடியை வளர்த்து விடுவதற்கான வேலையை இந்த ஒரு டோனர் செய்யும். இனி தலையிலிருந்து முடி கொட்டுமோ என்ற பயமே இருக்காது.

ஒரு பத்து நிமிடம் கருமை இருக்கும் இடங்களில் எல்லாம் நீங்கள் இதுபோல தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு ஈரத் துணியால் துடைத்து எடுத்தால் இறந்த செல்களெல்லாம் நீங்கி, நுண்ணிய துளைகளுக்குள் அடைப்பட்டிருக்கும் வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் அனைத்தும் வேருடன் வெளியேறி இன்ஸ்டன்ட் ஆக உங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் தெரியும். முகத்திற்கு இதை மசாஜ் செய்யும் பொழுது மென்மையாக மசாஜ் செய்யுங்கள். வாரம் ஒரு முறை மட்டும் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்து வந்தாலே போதும் என்றென்றும் இளமையுடன் உங்களுடைய சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -