முதுகு வலி, இடுப்பு வலி, முட்டி கால் வலி, எலும்பு தேய்மானம், முடி உதிர்வு பிரச்சினை அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பால் 1 டம்ளர் குடிங்க.

badam-milk0
- Advertisement -

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மிகவும் அவதிப்படுகிறார்கள். கொஞ்ச நேரம் இழுத்துப் பிடித்து வேலை செய்தால் கை கால் வலி வந்து விடுகிறது. இடுப்பு பிடித்துக் கொள்கிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எடை குறைவாக இருக்கிறது. சரியாக ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, இப்படி ஒரு பாதாம் மில்க் கலந்து கொடுத்தால், சத்தம் போடாமல் குடித்து விடும். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் இரவு சத்து நிறைந்த இந்த பாதாம் பாலை குடித்து வாருங்கள். 40 நாட்களில் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நிச்சயம் நல்ல மேம்பாடு தெரியும்.

அரைக்கும் முறை

தரமான பாதம் – 200 கிராம், தரமான முந்திரி பருப்பு – 50 கிராம், தரமான பிஸ்தா – 50 கிராம், சர்க்கரை – 200 கிராம், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 10, பால் பவுடர் – 50 கிராம். பத்து ரூபாய் பாக்கெட்டில் கூட பால் பவுடர் கிடைக்கின்றது. அதை வாங்கி இரண்டு பாக்கெட்டை, இந்த பாதாம் பொடியோடு கலந்து கொள்ளலாம். வாங்க இந்த பொருட்களை எல்லாம் வைத்து பாதாம் பொடி எப்படி அரைப்பது என்று பார்த்து விடுவோம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் முதலில் பாதாம் பருப்பை போட்டு வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பாதாம் நன்றாக சிவந்து லேசாக வெடிக்க தொடங்கும். பாதாம் இப்படி சிவந்து வர இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் எடுக்கும். அப்போது பாதாமை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்து முந்திரி பிஸ்தா இந்த இரண்டு பொருட்களையும் போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, அந்த கடாய் சூட்டில் ஏலக்காயை போட்டு விடுங்கள். இப்போது வறுத்த இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆரட்டும். தட்டில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை போடுங்கள். நன்றாக ஆறிய ஏலக்காயை மட்டும் தனியாக எடுத்து இந்த சர்க்கரையில் போட்டுக் கொள்ளுங்கள். கூடவே மஞ்சள் தூள் போட்டு சர்க்கரையை நைசாக பொடி செய்து விடுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த சர்க்கரையோடு வருத்த பாதாம் முந்திரி பிஸ்தா இந்த மூன்று பொருட்களையும் போட்டு முதலில் பல்ஸ் மோடில் விட்டுவிட்டு, அரைத்து, அதன் பின்பு பால் பவுடரையும் இதில் கொட்டி விட்டு உங்களுக்கு தேவையான மாதிரி இந்த பவுடரை அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் அரைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு தெரியும். ஆகவே ஓரளவுக்கு கொரகொரப்பாக இந்த பொடியை அரைத்து ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்தால் சூப்பரான பாதாம் பொடி வீட்டிலேயே தயார்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய டம்ளர் அளவு பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். அது சூடாகி வந்ததும், இரண்டு ஸ்பூன் அளவு நாம் அரைத்த இந்த பாதாம் பொடியை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் போல பாலை கொதிக்க விட்டு, அப்படியே டம்ளரில் ஊற்றி வெதுவெதுப்பாக குடித்தால் நல்ல ருசியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உப்புமாவை ஒரு முறை இந்த மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க உப்புமாவே பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட சட்டியை காலி பண்ணாம எந்திரிக்க மாட்டாங்க.

குழந்தைகளுக்கு காலையில் ஒரு நேரம் மாலையில் ஒரு நேரம் இந்த பாதாம் ட்ரிக் குடுங்க. நிச்சயம் அவர்களுடைய உடம்பு ஆரோக்கியம் பெறும். தினமும் பெண்கள் இதை குடித்து வந்தால் அவர்களுடைய அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சரியாகி ஆரோக்கியமும் மேம்பட தொடங்கும். உங்களுக்கு இந்த எளிமையான ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -