கடன் தீர்க்க செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம் இது! பைரவருக்கு இதை செய்தால் எவ்வளவு கோடி கடன் இருந்தாலும் விரைவாக தீரும்.

bairavar-cash-milagu-el-deepam
- Advertisement -

மனித வாழ்க்கையில் கடன் என்பது மிக மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய விஷயமாகும். எந்த பிரச்சினையையும் எளிதாக சமாளிக்கும் ஒருவருக்கு, கடன் பிரச்சினையை சமாளிக்க மட்டும் சில சமயங்களில் மனதில் தெம்பு இல்லாமல் போய் விடுகிறது. எப்படியாவது கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் கடனை வாங்குகிறார்கள் ஆனால் அதை கட்ட முடியாதபடி சூழ்நிலை தடுக்கும் பொழுது ஒரு விதமான பயமும், பதட்டமும் உண்டாகும். வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தும் இந்த கடன் பிரச்சனைகள் எளிதாக தீர்க்கும் சக்தி பைரவருக்கு உண்டு. அவருக்கு செய்யக் கூடிய இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

bairavar

செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் 27 என்கிற எண்ணிக்கையில் மிளகுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு சிறிய முடிப்பாக முடிந்து கொள்ளுங்கள். இதை உங்கள் பூஜை அறையில் வைத்து கொண்டு பைரவரை நினைத்து பைரவர் மந்திரங்களை உச்சரித்தவாறு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து பிரார்த்தியுங்கள்.

- Advertisement -

பின்னர் மாலை வேளையில் பைரவர் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு செவ்வரளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வரளி மலர்கள் இல்லை என்றால் சிகப்பு நிறத்தில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிகப்பு பைரவருக்கு உகந்த நிறம் ஆகும். 64 பைரவர்கள் மிகவும் விசேஷமானவர், சக்தி வாய்ந்தவர் என்றால் அது காலபைரவர் ஆவார்.

காலபைரவருக்கு நம் பிரச்சனைகளையும், கடன்களையும் தீர்க்கக்கூடிய சக்தி உண்டு. அவரை வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய கடன் தொல்லையும் எளிதில் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. கோடி கோடியாக கடன் இருந்தாலும் பைரவரை சரணடைந்தால் நொடியில் அந்த கடன்கள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக இருக்கும் காலபைரவருக்கு காலத்தை வெல்லக்கூடிய ஆற்றல் உண்டு.

- Advertisement -

ஒருவருடைய கிரக நிலை சரியாக இல்லை என்றாலும், காலநிலை சரியாக இல்லை என்றாலும், பைரவர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலன்களை தரும். கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்றும் ஆற்றல் பைரவருக்கு உண்டு. காலச் சக்கரத்தை சுழற்றும் கால பைரவருக்கு நம் சுய ஜாதகத்தில் இருக்கும் கடன் பிரச்சனையை மாற்றக் கூடிய வல்லமையும் உண்டு. மனதார கடன் தீர வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் ஒரு புத்தம் புதிய அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு முடிப்பை வைத்து நன்கு நனைத்து தீபம் ஏற்றி பைரவர் அஷ்டகம் வாசிக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வர எத்தகைய கிரக தோஷங்களும் நீங்கும். உங்கள் சுய ஜாதகத்தில் இருக்கும் கடன் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை இந்த பரிகாரத்திற்க்கு உண்டு. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், எத்தகைய மோசமான கடன் பிரச்சினையும் இருந்தாலும் கால பைரவரை வழிபடுவர்களுக்கு எளிதில் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -