வசீகரத் தோற்றத்தைப் பெற அம்பாள் வழிபாடு

balathiripura-sundhari
- Advertisement -

இன்றைய ஆன்மீக பதிவு பெண்களுக்கு மிக மிக பயனுள்ளபடி அமையும். நீங்கள் கணவரை விட்டுப் பிரிந்து இருந்த பெண்களாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். உங்களுக்கே தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. நான் அழகாக இல்லை, எனக்கு திருமணம் நடக்கவில்லை, என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கணவருக்கு, மனைவியின் மீது ஒரு ஈடுபாடு இல்லை.

இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை, மனைவி அழகாக இல்லை என்ற காரணத்தால், கணவர் மனைவியை ஒதுக்கி வைத்திருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் கணவரோடு நீங்கள் சேர்ந்துவிடலாம். பெண்கள் அழகாக, வசீகரத் தோற்றத்தைப் பெற செய்ய வேண்டிய அந்த அம்பாள் வழிபாடு என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஸ்ரீ பால திரிபுரசுந்தரி வழிபாடு

பால திரிபுரசுந்தரி அம்மன் வழிபாட்டை பற்றி தான் இன்று பார்க்கப் போகின்றோம். இந்த அம்மன், அழகிய சிறு வயது உடைய அம்பாளராக திகழ்கின்றாள். இந்த பால திரிபுரசுந்தரியின் திருவுருவப்படத்தை வாங்கி வீட்டில் வைத்து, இந்த பூஜை செய்தாலும் சரி, அல்லது விளக்கு ஏற்றி வைத்துவிட்டு திரிபுரசுந்தரியை மனதில் நினைத்துக் கொண்டும் இந்த பூஜையை வீட்டில் செய்ய தொடங்கலாம்.

சிவப்பு நிறத்தில் இருக்கும் தாழம்பு குங்குமம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை கலந்து, பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த குங்குமத்தை பாலா திருபுரசுந்தரியின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைப்பது இன்னும் சிறப்பு.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து பெண்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு பால திரிபுரசுந்தரி படத்திற்கு புதுசாக பூ வைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்யலாம். குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான். அர்ச்சனை செய்யும் போது பால திரிபுரசுந்தரியின் இந்த பீஜ மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் ஐம் க்லீம் சௌம்

- Advertisement -

108 முறை இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்துவிட்டு, பூஜையறையில் இருக்கும் பச்சைக் கற்பூரம் கலந்த குங்கும திலகத்தை எடுத்து பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். அம்பாளை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி, 48 நாள் பூஜை செய்தால் உங்களுடைய தோற்றத்தில் வித்தியாசம் தெரியும்.

அப்படி என்றால் சினிமா நடிகைகள் போல அழகாக மாறிவிடுவோமா. அப்படி கிடையாது. உங்கள் உருவத்தில் மாற்றம் இருக்காது. உங்களுக்குள் அந்த அம்மனின் கடாட்சம் வந்துவிடும். நீங்கள் தேஜஸ் ஆக லட்சுமி கடாட்சம் நிறைந்த பெண்களாக மாறிவிடுவீர்கள்.

சில பெண்களுக்கு எல்லாம் அழகு இல்லை என்ற ஒரே ஒரு காரணத்தால் அவர்களுடைய வாழ்க்கையே நிலை குலைந்து போயிருக்கும். திருமணமான கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கணவரோடு இல்லற வாழ்க்கை இனிமையாக மாறிவிடும்.

நீங்கள் கணவரை விட்டு பிரிந்திருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை செய்யலாம் ஒன்று சேரக்கூடிய பாக்கியத்தை அந்த அம்பாள் கொடுப்பாள். கணவரோடு வீட்டில் இருந்து ஒன்றாக வாழ முடியாமல் தவித்து வரும் பெண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர முருகர் வழிபாடு

தினமும் பூஜையின்போது அழகாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பதற்கு அந்த அம்பாள் போலவே தலையில் வாசனை பூ, நெற்றியில் குங்குமம், கையில் வளையல் என்று, மங்களகரத்தோடு இருக்கணும். இதை செய்தால் நிச்சயம் கணவருடன் சேரக்கூடிய பாக்கியத்தை அம்பாள் கொடுத்து விடுவாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -