தீராத நோய் தீர முருகர் வழிபாடு

murgan
- Advertisement -

மனிதர்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களுக்கும் தீர்வு தரக்கூடிய கலியுகத்தின் கண்கண்ட கடவுள், முருகப்பெருமான். சொந்த வீடு கட்ட, கடன் சுமையிலிருந்து வெளிவர, திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, இப்படி பல வகையான வேண்டுதல்களை, வரங்களை, முருகப்பெருமானிடம் கேட்கின்றோம். அந்த வரிசையில் தீராத நோய் தீர வேண்டும் என்றாலும் முருகப்பெருமானின் பாதங்களை நாம் பற்றி கொள்ளலாம்.

தீராத நோய் தீர முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்கு இந்த ஒரு பொருளை உங்கள் கையால் வாங்கி கொடுத்தால் போதும். ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். அந்த ஒரு பொருள் என்ன. அதை எந்த கோவிலில் இருக்கும் முருகப்பெருமானுக்கு வாங்கி கொடுப்பது அற்புதமான பலனை கொடுக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தீராத நோய் தீர முருகப்பெருமான் வழிபாடு

பெரும்பாலும் இன்று எல்லோருக்கும் தெரிந்த பிரபல்யமான கோவல்தான் இது. சிறுவாபுரி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு சென்றால் சொந்த வீடு கட்டிவிடலாம். திருமணம் நடக்கும். கடன் சுமை குறையும் என்ற நம்பிக்கை நம்மில் இருந்து வருகிறது. இதோடு சேர்த்து ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஆசீர்வாதத்தையும் இந்த முருகப்பெருமான் நமக்கு வழங்குகின்றான்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லி முள்ளி பொடி. இதை காய்ந்த நெல்லிக்காய் பொடி என்று சொல்லுவார்கள். அதை வாங்கி முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய சிறுவாபுரி முருகன் கோவில் குருக்களிடம் கொடுக்க வேண்டும். ஒரு நாள் இல்லைங்க, தொடர்ந்து 48 நாள் அந்த முருகப்பெருமானுக்கு உங்கள் கையால் வாங்கிக் கொடுத்த நெல்லி முள்ளி பொடியை கொண்டு அபிஷேகம் செய்தால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

48 நாள் அந்த சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு எங்களால் செல்ல முடியாது என்ன செய்வது. ஒரு நாள் மட்டும் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு, 48 நாளுக்கு தேவையான நெல்லி முள்ளி பொடியை வாங்கிக் கொண்டு போய் அந்த அர்ச்சகரிடம் சொல்லி கொடுத்து விடுங்கள். தினமும் இந்த நெல்லி முள்ளி பொடியை முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள்.

மிக மிக எளிமையான பரிகாரம்தான். வாய்ப்பு உள்ளவர்கள் சிறுவாபுரி முருகனை ஒருமுறை தரிசனம் செய்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக தீராத நோய்நொடி பிரச்சனைக்கு ஒரு தீர்வினை அந்த முருகப்பெருமான் காட்டிக் கொடுப்பான்.

- Advertisement -

சென்னை கோயம்பேட்டில் இருந்து, கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் தொலைவில், இந்த சிறுவாபுரி என்ற ஊர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு

அது மட்டும் இல்லாமல் பக்கத்து மாநிலத்தில் இருப்பவர்களும், இந்த கோவிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றார்கள். கோயம்பேட்டில் இருந்து, செங்குற்றத்திலிருந்து, காரணோடையிலிருந்தும் இப்படி பல இடங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -