நினைத்தது அப்படியே நடக்க, பல கோடி புண்ணியம் கிடைக்க இந்த வகையான சிவ லிங்கத்தை மட்டும் வீட்டில் வைத்து வழிபட்டால் போதும்.

bana lingam benefits in tamil
- Advertisement -

“ஆதியும் நீயே அந்தமும் நீயே” என்ற கூற்றிற்கு இணங்க அனைத்தையும் உள்ளடக்கி இருப்பவர் சிவபெருமான். அப்படியான சிவபெருமானை பலரும் பல ரூபங்களில் வழிபட்டாலும் பெரும்பாலானோர் லிங்க வடிவில் தான் வழிபடுகின்றனர். அப்படியான ஒரு லிங்க வடிவம் தான் பாணலிங்கம். இந்த வகையான லிங்கத்திற்கு பல அறிய சக்திகள் உண்டு. இந்த பாணலிங்கத்தை முறையாக எப்படி வழிபட்டால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

கோவிலில் இருக்கும் சிற்பத்திற்கு சக்திகள் அதிகம். அதைவிட சிறப்பு மிகுந்ததாக கருதப்படுவது சித்தர்களின் ஜீவ சமாதி. அதையும் விட மிகவும் சிறப்பாக கருதப்படுவது சுயம்புலிங்கம் ஆகும். இந்த சுயம்பு லிங்கத்தை நாம் வழிபடுவதால் நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள் நீங்கவும், ஜாதகத்தில் இருக்கக்கூடிய குறைபாடுகள் அகலவும், மேலும் நமக்கு ஏற்படும் கஷ்ட காலம் மாறவும், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத ஒரு வெறுமை நிலையில் இருந்து நம்மை வெளியில் கொண்டு வரக்கூடியது இந்த சுயம்பு லிங்கம் வழிபாடு ஆகும். இந்த சுயம்பு லிங்கத்தை கோவில்களில் மட்டுமல்ல, நம் வீட்டிலும் வைத்து வழிபடலாம்.

இந்த பாணலிங்கம் என்பது நர்மதா நதிக்கரையில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கையான சுயம்பு லிங்கம் ஆகும். மேலும் தோஷம் இல்லாத லிங்கமாக இந்த பாணலிங்கம் கருதப்படுகிறது. இதை கங்கையில் நீராட்டிவிட்டு வீட்டில் வைத்து பூஜித்தால் விசேஷ பலன்களை தரும். இந்த பாணலிங்க வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் பாணலிங்கம், பச்சரிசி மற்றும் பஞ்சபாத்திரம்.

- Advertisement -

பாணலிங்கம் வழிபாடு முறை:

பஞ்ச பாத்திரத்தில் பச்சரிசியை கொட்டி, அதன் நடுவில் பாணலிங்கத்தை வைக்க வேண்டும். தினமும் பாணலிங்கத்திற்கு ஆராதனை செய்ய வேண்டும். இந்த பாணலிங்கத்தை நாம் வீட்டிலும் வைக்கலாம், தொழில் ஸ்தாபனங்களிலும் வைக்கலாம். இதற்க்கு தினமும் சிவ நாமம் சொல்லி, தூபம் காட்டி, ஆராதனை செய்ய வேண்டும்.

தினமும் பூஜை செய்ய முடியாதவர்கள் திங்கட்கிழமைகள், பிரதோஷ தினங்கள், திருவாதிரை மற்றும் ஐப்பசி மாதத்தில் வரும் அன்னாபிஷேகம் போன்ற நாட்களில் பண ணலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, வில்வத்தால் அலங்கரித்து தீப, தூபம் காட்டி வழிபாட்டுக்கு விட்டு, சிவனுக்குரிய திருவாசகம், சிவன் மந்திரங்கள், சிவபுராணம் போன்றவற்றை துதிக்கலாம் அல்லது ஒலிக்கச்செய்யலாம்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு கோடி புண்ணியம் செய்த பலன் கிடைக்கும். அதோடு நம் பிரச்சினைகள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நீங்கும். கர்ம தோஷம் அகலும், செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் இந்த பாணலிங்கத்தை செம்பு பாத்திரத்தில் திருநீரைக் கொட்டி, அதனுள் வைத்து நாம் தினமும் அந்த திருநீற்றை பூசிக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: செல்வ சேர்க்கை உண்டாக்கும் குபேர மகாலட்சுமி மந்திர வழிபாடு

இவ்வாறு செய்வதன் மூலம் அந்த பாணலிங்கத்தில் இருக்கும் நல்ல அதிர்வுகள் அனைத்தும், அந்த திருநீற்றில் சேர்ந்துவிடும். நாம் தினமும் அந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் அணிவதன் மூலம் அந்த நல்ல அதிர்வுகள் நம்மை காக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த எளிய முறைகளை நம் வீட்டில் நாம் மேற்கொண்டு வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து இன்னல்களையும் நீக்கும் அந்த சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

- Advertisement -