பணத்தடை நீங்கி, பணம் வரவு தாராளமாக இருக்கவும், சுக்கிரனோடு அனுக்கிரகம் கிடைக்கவும் இந்த மந்திர வழிபாடு செய்தால் போதும். செல்வ வளத்தை வாரி வழங்கும் சக்தி வாய்ந்த மந்திரம்.

kubera lakshmi cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் பணம் பணம் என்று அதன் பின்னாலே ஓடிக் கொண்டு இருக்கிறோம். பணத்தை சம்பாதிக்க எத்தனையோ வழிகளில் பாடுபட்டு உழைக்கிறோம். என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நம்மால் பணத்தை சேமிக்க முடிவதில்லை. இது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு புறம் பாடுபட்டு உழைத்தாலும் வரவேண்டிய பணம் கைக்கு வராமல் பணத்தடை இருந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டையும் சரி செய்ய இந்த ஒரு எளிய வழிபாடு போதும் என்று ஆன்மீகம் சொல்கிறது.

ஒருவருடைய வாழ்க்கையில் பணத்தடை இல்லாமல் பணம் தாராளமாக புழங்க வேண்டும் என்றால் அவருக்கு மகாலட்சுமியின் அருளோடு சுக்கிர பார்வை வேண்டும். இந்த இரண்டையும் ஒரு சேர கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடு தான் குபேர மகாலட்சுமி பூஜை. இந்த பூஜையை செய்யும் இந்த ஒரு மந்திரத்தையும் சேர்த்து சொன்னால் குபேரர், சுக்கிரர், மகாலட்சுமி மூன்று பேரின் பரிபூரண அருளும் கிடைத்து நம் வாழ்க்கை மேலும் உயரும். இப்போது அந்த வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குபேர மகாலட்சுமி மந்திர வழிபாடு செய்யும் முறை:
இந்த வழிபாட்டை செய்வதற்கு உகந்த நாட்கள் வெள்ளிக் கிழமை காலை 6 லிருந்து 7 சுக்கிர ஒரை அல்லது குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை மாலை 5 லிருந்து 7 மணிக்குள் செய்யலாம். இந்த இரண்டு தினங்களில் உங்களுக்கு ஏற்ற ஒரு தினத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த பூஜை செய்வதற்கு லட்சுமி குபேரர் படம் அவசியம். இந்த படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்ல வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து இரண்டு நெய் தீபத்தை படத்தின் முன்பாக ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்து கொள்ளுங்கள். இந்த பாயாசம் நல்ல தரமான பசும்பால் கொண்டு முந்திரி திராட்சை போன்ற பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்து நல்ல ருசியாகவும் மணமாகவும் செய்து வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது இதனால் உங்களுக்கு சுக்கிர வசியம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது இந்த தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

ஓம் குபேராய லட்சுமியாக கமலத் தாரண்ய தனதான்ய தர்ஷண்ய ஸ்வாகா
என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும் போது மல்லி இருந்தால் அதை 108 முறை சொல்லிக் கொண்டே ஒவ்வொரு மலராக வையுங்கள் அல்லது டைமன் கல்கண்டு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி மந்திரத்தை சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: தீராத நோயினால் தினம் தினம் துன்பப்படுபவர்கள் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிப் பாருங்கள். மரண வாயில் வரை சென்றவரை கூட நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த திரு மந்திரம்.

இந்த பூஜையை தொடர்ந்து நீங்கள் செய்யும் போது உங்களுக்கான பணத் தடைகள் அனைத்தும் நீங்கி இந்த மூவரின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைத்து உங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் செல்வ வளத்தை பெருக்கிக் கொண்டு வாழ்வீர்கள்.

- Advertisement -