ஆயிசுக்கும் அழியாத அழகை பெற வேண்டுமா? இந்த மஞ்சள் குளியல் பொடியை தேய்த்து குளித்தால், சரும தொற்று, சொறி, சிரங்கு, கொப்பளங்கள் போன்ற எந்த சரும பிரச்சனையும் வராது.

face6
- Advertisement -

இன்று பெண்களுக்கு இருக்கக்கூடிய அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. காரணம் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றோம். நாம் பயன்படுத்தும் சோப்புகள், கிரீம்கள், பவுடர் எல்லாவற்றிலும் கெமிக்கல். நம்முடைய தோல் சீக்கிரத்தில் வயதான தோற்றத்தை அடைவதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் அழகு சாதனங்களும் கூட. ஆகவே, கொஞ்சம் செயற்கையான விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி இயற்கையான முறையில் சொல்லப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் வாங்கி அரைத்து உடம்பில் பூசி குளிக்க பழகி வாருங்கள். சிரமம் பாக்காதீர்கள். அழியாத அழகு உங்களுக்கு ஆய்சுக்கும் இருக்கும்.

வீட்டிலேயே பூசு மஞ்சள் தயார் செய்யும் முறை:
இந்த பவுடர் அரைப்பதற்கு நமக்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். கஸ்தூரி மஞ்சள் 1/2 கிலோ, ஆவாரம்பூ 1/4 கிலோ, ரோஜா இதழ் 1/4 கிலோ, பூலாங்கிழங்கு 100 கிராம், வசம்பு 100 கிராம், இந்த ஐந்து பொருட்கள் தான். இது எல்லாமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கிக் கொள்ளவும். காய்ந்த ஆவாரம் பூ, காய்ந்த ரோஜா இதழ்கள் எல்லாமே ரெடிமேட் ஆக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

- Advertisement -

இது காய்ந்த பொருளாகவே நீங்கள் வாங்கினாலும், இந்த ஐந்து பொருட்களையும் வாங்கி ஒரு முறை நன்றாக காயும் வெயிலில் ஒருநாள் முழுவதும் காய வைத்து விடுங்கள். பிறகு ஒரு சில்வர் டப்பாவை போட்டு ரைஸ்மிலில் அரைத்து தரும்படி சொல்லுங்கள். இது உடம்பில் பூசி குளிப்பதற்காக அரைக்கும் பொடி என்று சொல்லி அரைக்க வேண்டும். நைசாக இந்த பொடி அரைக்க வேண்டும். கொரகொரப்பாக அரைக்க கூடாது.

மஞ்சள் அரைக்கக்கூடிய மிஷினில் கொடுத்து இதை அரைத்து வீட்டுக்கு எடுத்து வந்து நன்றாக ஆறவைத்து காத்து போகாத பாட்டிலில் கொட்டி மூடி வைக்கவும். தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சின்ன டப்பாவில் போட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் படாமல் இருந்தால் ஒரு வருடத்திற்கு கெட்டுப்போகாது. ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்கள் கூட இந்த குளியல் பொடியை தாராளமாக பயன்படுத்தலாம்.

- Advertisement -

சோப்பு போட்டு குளித்த பிறகு இந்த குளியல் பொடியை உடல் முழுவதும் பூசி நன்றாக மசாஜ் செய்து பிறகு வெறும் தண்ணீரை ஊற்றி குளித்து விடுங்கள். தினமும் இந்த பொடியை போட்டு குளித்து வந்தால் பெண்கள் சருமம் பளபளப்பாக மாறும். உடல் துர்நாற்றம் நீங்கும். அது மட்டுமல்லாது, பெண்களின் அழகை குறைக்கும் தேவையற்ற முடி வளர்ச்சியானது குறையும். சரும தொற்று வராமல் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மின்னல் வேகத்தில் உங்களை வெள்ளையாக மாற்றும் வெள்ளரிக்காய்! செலவே இல்லாமல் சினிமா நடிகை போல அழகாக மாற இதை விட்டா வேற வழி இல்ல.

ஒரு வயது பெண் குழந்தை முதல், இந்த குளியல் பொடியை தாராளமாக பயன்படுத்தலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தேவை என்பவர்கள் இந்த பொடியை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு, பால், பன்னீர், தண்ணீர் எது வேண்டும் என்றாலும் ஊற்றி கலந்து ஃபேஸ் பேக்காக கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அழகான இந்த அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -