பிரியாணி இலையில் இதை எழுதி பர்ஸில் வைத்தால் குவியல் குவியலாக பணம் சேரும். பணம் வைக்க பர்ஸில் இடமே இருக்காது பாத்துகோங்க.

bay-leaf
- Advertisement -

ஒரு பர்ஸ் வாங்க கூட கையில் காசு இல்லை. ஆனால் பர்ஸ் நிரம்பி வழியும் அளவிற்கு பணம் வரபோகுதா, என்ற சந்தேகத்தோடு மட்டும் இந்த பரிகாரத்தை செய்யாதீங்க. இதை செய்தால் நிஜமாகவே பணம் குவியும் என்ற நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை செய்தால், நிச்சயமாக உங்களுடைய கையில் பணம் குவியும். ஒரே ஒரு பிரியாணி இலை. பிரியாணி இலையில் எழுதுவதற்கு ஒரு ஸ்கெட்ச் பென் அல்லது பேனா. இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும் இந்த பரிகாரத்தை செய்துவிடலாம். வாங்க பணத்தைக் குவிக்கும் அந்த அருமையான தாந்த்ரீக எளிய பரிகாரத்தை நாமும் தெரிந்து கொள்வோம்.

பணம் தரும் பிரியாணி இலை பரிகாரம்:
ஓரளவுக்கு கிழிசல் இல்லாத பிரியாணி இலையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் சில இடங்களில் பிரியாணி இலை பச்சை நிறத்திலும் கிடைக்கும். எப்படி இருந்தாலும் சரி, உங்களுடைய சவுகரியத்திற்கு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் கிழிசல் இல்லாமல் பார்த்துக் கொண்டால் போதும். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். இந்த பிரியாணி இலையில் எடுத்து வைத்திருக்கும் நீல நிற பேனாவில் ‘ஸ்ரீம்’ என்ற எழுத்தை எழுத வேண்டும். இது மகாலட்சுமியின் பீஜ மந்திரம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை எழுதி மனதார மகாலட்சுமி தாயையும் குலதெய்வத்தையும் வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி இந்த வார்த்தையை எழுதிய பிரியாணி இலையை உங்களுடைய மணி பர்ஸில் வைத்து விடலாம். பிறகு எம்டியாக இருக்கும் உங்களுடைய மணி பர்ஸ், வைட்டாக ஆக மாறிவிடும். படிப்படியாக பணம் காசு சேர தொடங்கிவிடும்.

இதே போல இரண்டு அல்லது மூன்று பிரியாணி இலைகளில் ஸ்ரீம் என்ற வார்த்தைகளை எழுதி, அந்த பிரியாணி இலையை உங்களுடைய பீரோவில் வைக்கலாம். சமையல் அறையில் வைக்கலாம். நகை வைக்கும் பெட்டியில் கூட வைக்கலாம். இந்த இலை எந்த இடத்தில் எல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமியின் அம்சம் நிறைவாக இருக்கும். இந்த இலையை மீண்டும் எப்போது மாற்றுவது. இலை கிழிந்து விட்டது ரொம்பவும் பழையதாகி விட்டது எனும் போது மட்டும் இலையை மாற்றி மீண்டும் ஸ்ரீம் என்ற வார்த்தையை எழுதி வைத்தால் போதும்.

- Advertisement -

ஆண்கள் பெண்கள் வேலைக்கு செல்பவர்கள் என்று யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதை செய்தால் உங்களுடைய மாத வருமானம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இங்கிரிமெண்ட் கிடைக்கும். பதவி உயர்வு கூட கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த பரிகாரத்தை செய்ய நேரம் காலம் எல்லாம் பார்க்காதீங்க. இந்த பதிவை படித்த பின்பு இன்று வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இருக்கின்றது இன்றே கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக பல பல கஷ்டகத்திற்கு ஒரு விமோசனம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தோல்வியை மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிகள் குவிய இதை பூஜை அறையில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று, கோவிலில் எங்கேயாவது அமர்ந்து அந்த இடத்தில் பிரியாணி இலையில் இந்த வார்த்தையை எழுதி, அந்த பிரியாணி இலையை கொண்டு வந்து நீங்கள் பரிகாரத்திற்க்கு பயன்படுத்தும் போது அதனுடைய பலன் இன்னும் அபரிவிதமாக உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் இதனயும் செய்து பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து பலன் பெரலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -