தோல்வியை மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிகள் குவிய இதை பூஜை அறையில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

vinayar success
- Advertisement -

நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையான தேவை பணம் மட்டும் தான் என்று நினைத்து அனைவரும் அதன் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையானது இறைவன் நமக்கு அளித்த அற்புத வரம் இதை சரியான முறையில் கையாண்டால் நிம்மதியான முறையில் மகிழ்ச்சியான வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம்.

பல பேருக்கு வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் விரக்தி நாம் எதை செய்தாலும் சரி வராது நமக்கு இது நடக்காது என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் இன்று நல்ல முறையில் இருப்பவர்கள் எல்லாம் எடுத்த உடனே அந்த நிலை எட்டி இருக்க முடியாது . அதற்கான துன்பங்களையும், துயரையும் அவர்களும் கடந்து தான் ஜெயித்திருப்பார்கள். இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இது போன்று வாழ்க்கையில் தோல்வியில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று புலம்புபவர்கள் முன்னுக்கு வருவதற்கான ஒரு அற்புதமான பரிகாரத்தை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வாழ்க்கையில் வெற்றி பெற பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு வெள்ளெருக்கன் விநாயகர் தேவை. இப்படி சொன்னவுடன் நேராக கடைக்கு சென்று அங்கு கிடைக்கும் வெள்ளருக்கன் விநாயகரை வாங்கி வந்த பூஜை செய்வதால் எந்த பலனும் கிடையாது. இந்த பரிகாரத்திற்கு வெள்ளை எருக்கன் கட்டையில் செய்த விநாயகர் தானா என்று தெரிந்தவர்களிடம் விசாரித்து வாங்கி செய்தால் மட்டுமே அதற்கான முழு பலனை பெற முடியும்.

இப்படி வாங்கிய விநாயகர் வீட்டுக்கு கொண்டு வந்து நேரடியாக அப்படியே விட்டு பூஜை செய்யக் கூடாது. இதை ஒரு வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் இந்த விநாயகருக்கு மஞ்சளை குழைத்து முழுவதுமாக பூசி வீட்டில் உயரமான இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த விநாயகரை எடுத்து அதன் மேல் இருக்கும் மஞ்சளை எல்லாம் சுத்தமாக துடைத்த பிறகு, ஒரு முறை தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு சந்தனத்தை குழைத்து அதை விநாயகர் மீது தடவி மறுபடியும் வைத்து விடுங்கள்.

மூன்றாவது வெள்ளிக்கிழமை மறுபடியும் இதே விநாயகரை எடுத்து சுத்தம் செய்த பிறகு பூஜையறையில் வைத்து நீங்கள் வழிபாடு செய்யலாம். விநாயகரை எடுத்து சுத்தம் செய்யும் முதல் இரண்டு வாரமும் ராகு கால நேரத்தில் தான் செய்ய வேண்டும். மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வம்சம் விருத்தியாக வாழைப்பூ பரிகாரம்

இந்த பூஜையை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள் எல்லாம் ஜெயமாக மாறும். நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் எந்த விதை தடையும் இல்லாமல் வெற்றியை மட்டுமே சந்திப்பீர்கள்.

- Advertisement -