பயம் நீங்க, ஏழு ஜென்ம பாவம் தீர இந்த ஒரு சிறப்பு வாய்ந்த தானத்தை மட்டும் செய்திடுங்கள். உங்கள் பயம் அகன்று நிம்மதி கிடைக்கும்

aadi-dhanam
- Advertisement -

மனிதனாகப் பிறந்தவன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும். சிலர் நன்றாக சம்பாதித்தும் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் சஞ்சலத்துடன் இருப்பார்கள். அவர்களை சுற்றி பலர் இருந்த போதிலும் அவர்களின் மனது எதையோ இழந்தது போலவே யோசித்துக் கொண்டிருக்கும். எப்பொழுதும் ஏதேனும் ஒரு பயம் இவர்களை சூழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் திணறி கொண்டிருப்பார்கள். இவ்வாறு மனது குழப்பத்துடன் இருப்பதற்கும், தேவையில்லாத பயம் ஏற்படுவதற்கும் நாம் செய்த பாவங்கள் கூட காரணமாக இருக்கலாம். நம்மிடம் அனைத்தும் இருந்தபோதிலும் இவ்வாறான பயம் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். மரணம் நம் அருகில் இருப்பது போல் தோன்றும். இதுபோன்ற சூழ்நிலையை சரிசெய்ய இந்த வஸ்திர தானத்தை இவர்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மனிதனின் வாழ்க்கை கர்ம வினைகளின் பலனை பொறுத்து தான் இருக்கிறது. சிலர் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென அவர்கள் எதிர்பாராத வகையில் அவர்களின் தொழிலிலோ, குடும்பத்திலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறி அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விடுவார்கள்.

- Advertisement -

இவ்வாறு மனித வாழ்க்கையின் ஏற்ற இறக்கம், மகிழ்ச்சி துன்பம் இவை அனைத்துமே அவன் செய்த கர்ம வினைகளின் பலனாகவே கிடைக்கிறது. ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஒருவர் செய்யும் பாவத்தின் பலனை தான் சனீஸ்வர பகவான் இந்த ஜென்மத்தில் வரம் மற்றும் சாபமாக கொடுக்கிறார். இதனை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கடந்துதான் வரவேண்டும்.

செய்கின்ற பாவங்களுக்கு ஏற்ப துன்பங்களும், செய்கின்ற புண்ணியங்களுக்கு ஏற்ப சந்தோஷங்களும் கிடைக்கின்றன. அதுபோல இனம்புரியாத மரண பயம் ஒரு சிலரின் மனதில் இருந்து கொண்டிருக்கும். இந்த பயம் இருப்பதற்கு காரணமும் இது போன்ற பாவ வினைகளின் பலன்கள் தான். விரைவில் நம்மை மரணம் கொண்டு சென்றுவிடும், எப்போது வேண்டுமானாலும் எனக்கு என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்ற எண்ணங்கள் மனதில் தோன்றி விடும்.

- Advertisement -

இவ்வாறான எண்ணங்கள் மனதை விட்டு அகலவும், நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் கோவில்களில் இறை வழிபாடுகளின் பொழுதும், விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களின் பொழுதும் இசை வாத்தியங்கள் வாசிக்கும் கலைஞர்களுக்கு அன்னதானம் வழங்கி, வஸ்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்துவர உங்கள் பாவங்களுக்கான பலன் குறைந்து, உங்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும்.

செய்த பாவங்களின் பலன் முழுவதுமாக தீரவில்லை என்றாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். வரப்போகும் இன்னல்களை நீங்கள் சமாளிக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு உண்டாகும். பெரிய மலை போன்ற பிரச்சனையாக இருந்தாலும் அவை கடுகு போன்று கரைந்து விடும்.

- Advertisement -