கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.
நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் நிர்வாக கமிட்டியான பி.சி.சி.ஐ இந்த தாக்குதலில் பலியான குடும்பங்களின் நிலையிமனை கருத்தில் கொண்டு நிதி அளிக்க முன்வந்துள்ளது.
அதன்படி பி.சி.சி.ஐ கட்டுப்பாடு சார்பாக ருபாய் 5 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த நிதியுதவியினை அந்த குடும்பத்தாரிடம் சரியான முறையில் சென்று அடையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த செய்யலால் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்