வெங்காயம் தக்காளி தேங்காய் எதையுமே சேர்க்காம சிம்பிளான இந்த பொரியல் ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா இப்ப இருக்க விலைவாசியை சூப்பரா சமாளிச்சிடலாம்.

beans potato poriyal
- Advertisement -

இப்பொழுதெல்லாம் வெங்காயம் தக்காளி விற்கும் விலையை நினைத்தால் எதையும் வாங்கி சமைக்கவே பயமாக இருக்கிறது. என்ன தான் விலைவாசி ஏறினாலும் அதற்காக நாம் சாப்பிடாமல் இருக்க முடியும்மா என்னா. ஏதாவது ஒன்றை நாம் செய்து தானே ஆக வேண்டும். இப்படி ஆன நேரத்தில் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக இது போல சிம்பிளான ரெசிபிகளை தெரிந்து கொண்டால் நல்லது தானே. அந்த வகையில் வெங்காயம் தக்காளி இதெல்லாம் சேர்க்காமல் செய்யும் ஒரு அருமையான பொரியல் ரெசிபியை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

பீன்ஸ் – 150 கிராம், உருளைக்கிழங்கு – 150 கிராம், மிளகாய்த் தூள் -1 ஸ்பூன், தனியா தூள் -1 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி -1 ஸ்பூன், உப்பு -1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு

- Advertisement -

செய்முறை

இந்தப் பொரியல் செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கை மேல் தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி கொள்ளுங்கள். அதைப் போல பீன்ஸையும் நறுக்கி இரண்டையும் தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த காய்களை நறுக்கும் போது இரண்டையும் சமமான அளவில் நறுக்கிக் கொள்ளுங்கள். அப்போது தான் வேகும் போது இரண்டும் ஒன்றாகவே வேகும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த இந்த காய்கறிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெயிலே காய்களை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காய்கள் ஓரளவிற்கு வெந்த பிறகு மிளகாய் தூள், தனியா தூள் கரம் மசாலா, மஞ்சள் தூள் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடுங்கள். இதிலேயே காய்கள் நன்றாக வெந்து காரம் எல்லாம் ஊறி விடும். அதன் பிறகு கஸ்தூரி மேக்தியை கைகளால் கசக்கி மேலே தூவி மேலும் ஒரு நிமிடம் மட்டும் நன்றாக கலந்து விடுங்கள்.

இவையெல்லாம் சேர்ந்து ஒன்றாக வதங்கி காயில் ஊறியதும் கடைசியாக கருவேப்பிலை கொத்தமல்லியை மேலே தூவி ஒரே ஒரு முறை மட்டும் கலந்து இறக்கி விட்டால் அருமையான பீன்ஸ் உருளைக்கிழங்கு பொரியல் தயார். இதில் கஸ்தூரி மேத்தி, கரம் மசாலா எல்லாம் சேர்த்து இருப்பதால் ஒரு அசைவ சைட் டிஷ் சாப்பிடுவது போல ரொம்பவே நன்றாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: வெறும் 1/2 மணி நேரத்தில் ஒரு தக்காளி கூட சேர்க்காமல் இவ்வளவு சுவையாக சிக்கன் கிரேவி செய்ய முடியுமா? ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிரீன் சிக்கன் கிரேவி ரெசிபி இதோ உங்களுக்காக.

இந்த பொரியலை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எதற்கு வேண்டுமானாலும் வைத்து சாப்பிட ரொம்பவே நன்றாக இருக்கும். இதில் மசாலா சுவையும் சேர்ந்து இருப்பதால் வெரைட்டி ரைஸ்களுக்கு கூட வைத்து சாப்பிடலாம் நன்றாக இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -